11:38 PM | Posted by
Tamil National Peoples Front
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. தம்மைப்போல த.தே.கூட்டமைப்பும் அந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென்றும் அந்த அறிக்கை சா்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ள, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த அறிக்கையை அடியோடு நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளது.கட்சியின் உபதலைவா்களில் ஒருவரும், வெளிவிவகார குழு இணைப்பாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் 3 ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (19-12-2011) ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்டது. அம் மாநாட்டில் திருமதி பத்மினி சிதப்பரநாதன், பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனா். அங்கு மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு.
இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டமை பற்றிய அறிவிப்பு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னா் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட போது 24-10-2010 அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதே அலுவலகத்தில் நடாத்திய உடகவிலாளா் மகாநாட்டில் நல்லிணக்க ஆணை குழு நியமிப்பு நாடகம் சா்வதேசத்தை ஏமாற்றுவதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமான கண்துடைப்பு நடவடிக்கை என்பதனை சுட்டிக்காட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரிப்பதாக அறிவித்திருந்தது.கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டி வந்தது போன்று இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை மூடி மறைத்து முற்றாக புலிகளையும் தமிழ் தரப்புகளையும் குற்றஞ்சாட்டுவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கை வெளி வந்துள்ளது. இந்நிலையில் சர்வதேசம் இனியும் பொறுத்திராது பக்கசார்பற்ற சா்வதேச விசாரணை ஒன்றை நடத்த முன்வர வேண்டுமென வலியுறுத்தினா்.மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் கருத்து தெரிவிக்கையில் ஐநா நிபுணா் குழுவின் அறிக்கை வெளிவந்தபோது அதனை வரவேற்பது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் வரவேற்றனா். ஆனால் இன்றுவரை தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடா்பாக ஓா் சா்வதேச விசாரணை வேண்டுமென்ற கோரிக்கை கூட்டமைப்பினரால் வலியுறுத்தப்படவில்லை.இந்நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முழுமையாக நிராகரிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டதுடன், அவர்கள் கடந்த அறுபது வருடங்களாக இடம்பெற்ற இனப்படுகொலை தொடா்பாக சா்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். மேலும் இனியும் காலத்தை கடத்தாது கூட்டமைப்பினா் இவ்விடயத்தினில் விரைந்து தமது கட்சியின் பொது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேடடுக்கொண்டார்.சர்வதேசம் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை பொறுப்பேற்கவேண்டும். ஆனால் அது போர் நடந்த இறுதி மூன்று வருடங்களுக்கானதாக மட்டும் இருக்ககூடாது. ஆங்கிலேயா்கள் இலங்கையிலிருந்து விலகிய காலம் முதல் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடா்பாக முழுமையாக விசாரிக்கப்படவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் முன்வைத்த பத்து அம்ச கோரிக்கைகள் வரவேற்கத்தக்கவையென தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆனால் கூட்டமைப்பினை திருத்தலாமென்ற தமிழ் சிவில் சமூக அமைப்புக்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாதெனவும், கூட்டமைப்பினா் தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டு பிற சக்திகளது நலன்களுக்காக செயற்பட்டு வருகின்றனா். இதனால் அவா்கள் ஒபோதும் திருந்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.சில வேளைகளில் அந்த எண்ணம் நிறைவேறினால் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்களாக நாங்களே இருப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் பின்னணியில் தாங்களே இருப்பதாக கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கூறுகின்றனரே என எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூட்டமைப்பினருக்கு நோக்கி சிவில் சமூகத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களில் கவனம் செலுத்துவதைவிட்டு, நொண்டிச்சாட்டு தேடுவதே இப்போது அவா்களுக்கு பழக்கமாகிப் போய்விட்டதாக வும் கூறினார்.புத்திஜீவிகளையும் பொது அமைப்புக்களையும் சேர்ந்த தமிழ் சிவில் சமூக அமைப்பு எமது கட்சியின் பின்னால் இருப்பதாக கூறுவது அவர்களது முயற்சியை கொச்சைப்படுத்துவதனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. உண்மையில் அவர்கள் எம் பின்னால் இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம் எனவும் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் கூட்டமைப்புத் தலைவா் இறுதி யுத்தத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்று கூறிவருகின்றார். ஆனால் இறுதி யுத்தத்தில் நடைபெற்றது என்ன என்பது கூட்டமைப்பினருக்கு மிகவும் நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் இனப் படுகொலை தொடா்பான சா்வதேச விசாரணை ஒன்றை கோராது உண்மைகளை கண்டறிய வேண்டும் எனக் கோருவது இனப் படுகொலையில் ஈடுபட்டுவந்த சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை கிடைக்காமல் தடுத்து நிறுத்துவதுமே கூட்டமைப்பினரது நோக்கம் என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சிகள் இடம்பெற்றால் இறுதியில் படுகொலையில் ஈடுபட்டவா்கள் பாதிக்கப்பட்டவா்களிடம் மனம்வருந்துகின்றோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதுடன் விடயங்கள் முடிந்துவிடும். படுகொலை புரிந்த எவரும் தண்டிக்கப்பட போவதில்லை. அது மட்டுமன்றி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனத்திற்கு சா்வதேச சட்டங்களின் படி கிடைக்க வேண்டிய அரசியல் ரீதியாக நன்மைகளும் கிடைக்காமலே போய்விடும்.இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினா் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற கதைகளை விட்டு இடப்பெற்ற இனப்படுகொலைகள் தொடா்பான சா்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும். இது விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் வழிப்பாக இருக்க வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார்.
11:27 PM | Posted by
Tamil National Peoples Front
தமிழ்த் தேசத்தினை கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும், அடையப்பட்டு எமது நலன்கள் புறக்கணிக்கப்படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது.சர்வதேச அரசியலில் இலங்கைத் தீவின் முக்கியத்துவத்தினை கடந்த பத்தியில் விளக்கியிருந்தேன். அப் பத்தியில் தத்தம் நலன் சார் நடவடிக்கைகளை மையப்படுத்தி இயங்குகின்ற நாடுகள், இலங்கைத்தீவின் ஆட்சியினை தமக்குச் சார்பானதாக மாற்றியமைப்பதற்கு ஏற்ற வகையில், பூகோள அரசியலின் போக்கு எவ்வாறு உள்ளது என்பதனையும் சுட்டிக்காட்டியிருந்தேன்.தமிழ்த் தேசத்தின் சமகால வாய்ப்புகள்; தொடர்பாக இப் பத்திகளின் வாயிலாகத் தெரியப்படுத்தி வருகின்றோம். இந் நிலையில் தமிழ் மக்களுக்கு எந்ளவிற்கு முக்கியத்துவமும், வாய்ப்புக்களும் உள்ளதோ, அதேயளவிற்கு, தமிழ்த் தேசத்திற்கு கிடைக்கின்ற வாய்ப்புக்களையும், முக்கியத்துவத்தினையும், தமிழ்த் தரப்புக்கள் சரியான முறையில் பயன்படுத்தாது விட்டால் ஆபத்துக்களும் உள்ளன. அத்துடன், இன்று, தமிழ் தேசத்திற்கு சார்பாக உருவாகியுள்ள வாய்ப்புக்களையும், முக்கியத்துவத்தினையும், தமிழ் அரசியல் தலைமைகளும், தமிழ் மக்களும் உரிய முறையில் புரிந்து, அதற்கேற்றவகையில் தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்ற நோக்கில் இப்பத்தி எழுதப்படுகிறது.இந்த வகையில் இலங்கைத் தீவினுள் தத்தம் நலன்சார்ந்த விடயங்களுக்கான நகர்வுகளை நாடுகள் முன்னெடுத்துச் செல்கையில், அவ்வப்போது கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்திக் கொள்ளாது அரசுக்கு வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைத்து வாய்ப்புக்களைத் தொலைத்துக்கொண்ட சந்தர்ப்பங்கள் தமிழ்த் தேசத்தினுடைய வரலாற்றில் உண்டு. இவ்வாறாக இழக்கப்பட்ட சந்தர்ப்பங்கள், பின்னர் தமிழ்த் தேசதத்தினை எவ்வாறு நெருக்கடிக்குள்ளாக்கியது என்ற வரலாற்று உதாரணங்களையும் முன்வைத்து இப் பத்தி நகர்கிறது.
பிராந்திய மற்றும் பூகோள ரீதியான அரசியல் காரணங்களை அடிப்படையாக வைத்து, 1980 களில் தமிழ்த் தேசத்தின் போராட்டத்தினை இந்தியா தனது நலன்சார்ந்த நடவடிக்கைகளுக்காக கையில் எடுத்திருந்தது. இதனூடாக, இந்தியா, தனது பிராந்தியத்தில் இருக்கின்ற இலங்கைத் தீவில், ஏனைய சக்திகளின் பலம் ஓங்குவதைத் கட்டுப்படுத்த முற்பட்டது. அதனடிப்படையில், உருவான இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் வாயிலாக, தனது நலன்கள் காப்பாற்றப்பட்ட சூழ்நிலையில், இந்தியா செயற்பட்ட விதம் வெளித்தெரிந்த விடயமாகும். அதாவது, தனது நலனை கருத்தில்கொண்டு தமிழ் தேச விடுதலைப் போராட்டத்திற்கு, ஆயுதமும், பயிற்சியும் வழங்கிய இந்தியா, பின்னர் சிங்கள தேசத்துடன் இணைந்து தமிழ்த் தேசத்திற்கு எதிராக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.அன்றைய காலப்பகுதியில் செயற்பட்ட தமிழ் அரசியல் தரப்புக்கள், எமது மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகள் என்ற விடயத்தில் விட்டுக் கொடுப்புக்கள் இன்றி, நேர்மையாகவும் ஒற்றுமையாகவும் செயற்பட்டிருந்தால், இன்று தமிழ்த் தேசத்தின் இருப்பு அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் மக்கள்; கௌரவமாகவும், பாதுகாப்பாகவும் வாழக்கூடிய சூழல் ஏற்பட்டிருக்கக்கூடும்.கடந்த காலத்தில் ஏற்பட்டது போன்ற ஆபத்தான சூழ்நிலைகளை இனிவருங்காலத்திலும் தமிழ்த் தேசமானது எதிர்கொள்ளக்கூடாது என்பதற்காகவே, மேற்குறிப்பிட்ட கருத்துக்களை வரலாற்றின் வழி நின்று நான் சுட்டிக்காட்டுகிறேன். இன்று, இலங்கைத் தீவினை மையமாகக் கொண்ட சர்வதேச நலன்சார் போட்டிகள் உச்சம் பெற்றுள்ள நிலையில், அப் போட்டியினுள் தமிழ்த் தேசம் தனக்கு உரித்தான சுயநிர்ணய உரிமையைப் பணயம் வைத்து அல்லது விட்டுக்கொடுத்து விட்டு சகலதையும் இழக்கும் ஆபத்துக்குள் சிக்கிக் கொள்ளக் கூடாது.கடந்த காலத்தில், இலங்கைத் தீவினை மையப்படுத்திய சர்வதேசத்தின் அரசியல் நலன் சார் போட்டிகளுக்கிடையில், தமிழ்த் தேசத்தின் இருப்பு பாதுகாக்கப்படுவதற்கு தமிழீழ விடுதலைப் புலிகளே காரணமாக இருந்தனர். ஆயினும், தமிழ் மக்களின் நலன்களுக்கு மாறாக, வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் செயற்பட்ட தமிழ் அரசியல் தலைமைகள் மற்றும் ஆயுதத்; குழுக்களினால், சர்வதேச நலன்சார் போட்டிகளுக்கு மத்தியில் விடுதலைப் போராட்டம் வெற்றி பெறமுடியவில்லை. இவ்வாறு, கடந்த காலத்தில் செயற்பட்டவர்களது தவறுகளை கருத்தில் கொண்டு, அவ்வாறான தவறுகள் இனியும் ஏற்படாதவாறு, இயலுமான வரை நிதானத்துடன் செயற்படவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். ஆகவே, இந்த பணியை சரியாக முன்னெடுக்க வேண்டும். இவ் வகையில் சமகால விடயங்களில் மக்கள் தெளிவாகவும் நிதானமாகவும் இருக்கவேண்டும் என்ற கட்டாயத் தேவையுள்ளது.முன்னைய பத்திகள் வாயிலாக தமிழர் பிரச்சினைகளை முன்வைத்து சர்வதேச நலன்சார் போட்டிகள் நகர்த்தப்படுகின்றன என்பதைக் கூறியிருந்தேன். இவ்வாறாகப் பார்க்கையில் தத்தம் நலன்களின் நோக்கில் முத்தரப்பாக தலையிடுகின்ற நாடுகள், எவ்வாறாக தமிழ்த் தேசத்தின் பிரச்சினைகளை மையப்படுத்தி செயற்படப் போகின்றன என்பது பற்றியும், அத்தகைய தருணத்தில், நாம் எத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்பது பற்றியும் தரப்புகள் வாரியாகப் பார்கப்படவேண்டியுள்ளது.தற்போது, சிறீலங்கா அரசு, இலங்கைத் தீவில் சீனாவின் நலன்களுக்கு இடமளிக்கும் வகையிலேயே நடந்து கொள்கின்றது. இதனை, தற்போதைய ஆட்சிப் பீடத்;தோடு உருவான மாற்றமாக நாம் பார்க்க முடியும். ஆகவே தனது நலன்களின் அடிப்படையில் நாடுகள் தலையீட்டை மேற்கொள்கையில், சீனாவுக்கு தமிழ்த் தேசத்தின் பிரச்சினையை ஓர் கருவியாக கையில் எடுக்க வேண்டிய தேவைபாடுகள் குறைவு.அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு விரும்பும் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணம், சிறீலங்காவின் இன்றைய ஆட்சிபீடம் மேற்குலகின் நிகழ்ச்சி நிரலுக்குள் இல்லை என்பதுவும் அதன் காரணமாக தமது நலன்சார் நிலைமைகள் பேணப்படாது போவதுமேயாகும்.தமிழ்த் தேசத்தின் மீது, சிங்கள தேசத்தினால் மேற்கொள்ளப்படும் இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்களை நோக்குகையில், அது இன்று நேற்று அதாவது சிறீலங்காவின் இன்றைய ஆட்சிபீடத்துடன் ஆரம்பிக்கப்பட்டதொன்றல்ல. அது காலகாலமாக, மாறி மாறி ஆட்சிக்கு வந்த சிங்கள ஆட்சியாளர்களின் ஒர் தொடர்ச்சியான அரச கொள்கையாகவே அமைகின்றது. இவ்வாறாக, படிப்படியாக அரங்கேற்றப்பட்டு வந்த இன அழிப்பு மற்றும் மனித உரிமை மீறல்கள்; உச்சக் கட்டத்தினை அடைந்தது, சிறீலங்காவின் இன்றைய ஆட்சிக்காலத்திலேயே ஆகும். இவற்றை இக்கட்டுரையில் எடுத்துரைப்பதன் நோக்கம் சிங்களத் தேசத்தில் ஏற்படப்போகும் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் தமிழர் தரப்பிற்கு எதனையும் பெற்றுத்தரும் என கற்பனை கொள்ளக் கூடாது என்பதற்காகவே. அதேவேளை, அமெரிக்கா தலைமையிலான மேற்குலகு விரும்புவது போன்று சிங்கள தேசத்தில் ஏற்படுத்தப் படக்கூடிய வெறும் ஆட்சிமாற்றம், தமிழ்த்தேசம் பிரச்சினைகளுக்கு ஒருபோதும் தீர்வாகாது. இலங்கையில் ஆட்சி மாற்றத்திற்காக, சிங்கள தேசத்தினால் தமிழ் தேசத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் போன்ற விடயங்களை மேற்குலகு கையிலெடுத்துக்கொண்டாலும், அது அவர்களின் நலன்களை மையப்படுத்துவதாவே அமைகின்றது. மேற்குலகினால் ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்பட்டு, அதன்வாயிலாக மேற்கிற்குச் சார்பான ஓர் ஆட்சி உருவாகியதும், நலன்சார் அடிப்படையில் மேற்குலகின் முன்னுள்ள பிரச்சினைகள் தீர்வுக்குள்ளாகிவிடும். எனவே, மேற்குலகு விரும்புவது போன்ற ஆட்சிமாற்றம் ஏற்படுத்தப்படும் இடத்து, இலங்கைத் தீவில் காணப்படும் தமிழ்த் தேசத்தின் அரசியல் பிரச்சினைகளை கையாளவேண்டிய சூழல் மேற்குலகிற்கு இல்லாமல் போய்விடக்கூடும்.இதேவேளை, மேற்குலகினால் ஆட்சிக்குக் கொண்டுவரப்படும் ஆட்சியாளர்களும், தேர்தல், அரசியல் என்று வருகையில் சிங்கள தேசத்தின் வாக்கு வங்கியிலேயே தங்கியிருக்கப்போகின்றார்கள். மேற்குலகினால் புதிதாகக் கொண்டுவரப்படும் ஆட்சியாளர்கள், சிங்கள தேசத்தின் வாக்கு வங்கியில் தங்கியிருக்கையில், அவர்கள் சிங்கள தேசத்தின் விருப்புக்கும், மனநிலைக்கும் மாறாக தமிழ்த் தேசத்துடன் நியாயபூர்வமான தீர்வொன்றுக்குச் செல்ல முடியாத நிலையே யதார்த்தத்தில் நிலவும். எனவே தான் புதிதாக ஆட்சிக்கு வருவோர், சிங்கள பேரினவாதத்தினால் ஆட்சியிலிருந்து தூக்கிவீசப்படாது இருப்பதற்கான உத்தியாக அரசியலமைப்பில் ஏற்கனவே உள்ளடக்கப்பட்டுள்ள எந்தவிதத் தீர்வுமற்ற 13 ஆவது திருத்தச் சட்டத்தினையே (மாகாண சபைகளை) தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினைகளுக்கான தீர்வாக திணிக்க மேற்குலகு முற்படுகிறது.
தமது நலன்களை நோக்காகக் கொண்டு, தமக்கு சார்பான ஆட்சியாளர்கள், தமது நலன் சார் கடமைகளைத் திறம்பட ஆற்றவேண்டும் என்றே மேற்குலகினர் எதிர்பார்ப்பார்களே தவிர, ஆட்சியில் அமரும் புதிய ஆட்சியாளர் தமிழர் விடயத்திற்காக சிக்கல்கல்களைச் சந்திப்பதை விரும்பமாட்டாகள்.இந்த அடிப்படையிலேயே தமிழ்த் தேசத்தின் பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில், தமக்குச் சார்பான ஆட்சியாளர்கள் சிக்கல்களை எதிர்கொள்ளா வண்ணம் இருப்பதற்காக, எமது பிரச்சினை விடயத்தில், எவ்வித பெறுமதியுமற்ற 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினைத் ஒரு ஆரம்பப்புள்ளியாக பயன்படுத்த வேண்டும் என்பதை மேற்குலகு வலியுறுத்தி வருகிறது. இதனூடாக, தமிழ்த் தேசத்தினை அமைதிப்படுத்தி, சிங்கள தேசத்தின் அதிருப்தியினை சமாளித்துவிட அது விரும்புகிறது.யதார்த்தத்தில், மேற்கின் அபிலாசைப்படி இலங்கைத் தீவில் ஒருவர் ஆட்சிக்கு வந்தால் கூட, அவர் தமிழ் மக்களுக்கு எதுவித உரிமைகளையும் கொடுக்க மாட்டார் என்பது திண்ணம். இதனை மீறி, புதிதாக ஆட்சியில் அமருபவர் எதையாவது தமிழ் மக்களுக்கு கொடுக்க முற்பட்டால், அவர் சிங்கள பௌத்த தேசத்தினால் ஆட்சியில் இருந்து தூக்கிவீசப்படும் நிலையே ஏற்படும். சிங்கள ஆட்சியாளர்களுக்கும் தமிழ்த் தலைவர்களுக்குமிடையில் இனப்பிரச்சினைத் தீர்வை மையப்படுத்தி ஏற்கனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் உடன்படிக்கைகள் பேரினவாத நெருக்குதல்களால் கிழ்த்தெறியப்பட்ட முன்னுதாரணங்கள் இங்கு நினைவுகூரத்தக்கன.அரசியல் தீர்வு விடயத்தில் 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்குள் (மாகாண சபைக்குள்) தமிழ்த் தேசம் கட்டுண்டு போகது, எமது தேசத்தின் நலனை நோக்காகக் கொண்டு, நாம் ஒரு தனித் தேசம் எனவும், இறைமை உடையவர்கள் எனவும், சுயநிர்ணய உரிமைக்கு உரித்துடையவர்கள் எனவும், தாயகத்திலும், சர்வதேசரீதியிலும் உறுதியுடன் செயற்பட வேண்டியவர்களாக உள்ளோம். இவ்விடத்தில், இலங்கைத் தீவில் இடம்பெற்றது ஓர் இன அழிப்பு என்பதுடன், அது தற்போதைய ஆட்சிக் காலத்திலேயே உச்சக்கட்டத்தை அடைந்தது என்பதுவும் நாம் அறிந்தது. இதனையே நாம் வெளியுலகிற்கும் வலியுறுத்த வேண்டியுள்ளது.மேற்குலகின் தற்போதைய உடனடி தேவை ஆட்சிமாற்றம் ஒன்றை ஏற்படுத்துவதாகும். சுருக்கமாகக் கூறுவதாயின் சீன சார்புடைய தற்போதைய ஆட்சியை மாற்றி மேற்கு சார்பு அரசாங்கம் ஒன்றை நிலைகொள்ளச் செய்வது இவர்களது நோக்கமாகும். இவ்வாறு, மேற்குலகினால் மேற்கொள்ளப்படும் ஆட்சிமாற்றமானது, சிங்கள தேசத்தவரால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, நிலைத்திருக்க வேண்டுமாயின், அவ் ஆட்சியானது தமிழர்களுக்கு நியாயமான தீர்வொன்றை வழங்க முடியாது. ஆகவேதான், மேற்குலகம் இப்போதிருந்தே தமிழ் மக்களுக்கான இனப்பிரச்சினைத் தீர்வாக 13 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தினை அடிப்படையாகக் கொண்ட மாகாணசபைகளையே தீர்வொன்றாக வலியுறுத்த வேண்டும் என விரும்புகின்றது.கட்டம் கட்டமாக அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொள்ளலாம் என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அணுகுமுறை இந்த நிகழ்ச்சி நிரலை நிறைவேற்றுவதற்கானதே. இது தமிழ்த் தேசத்தின் இருப்புக்கு முரணனதும், ஆபத்தானதுமாகும் என்பதனை நாம் தெளிவுபடுத்துகின்றோம். இன்று, தமிழர் தரப்பு தொடர்பில் சர்வதேச சமூகம் பார்வையைச் செலுத்தும் நிலையில் நாம் இந்தப்பொறிக்குள் வீழ்ந்துவிடாது எமது முழுமையான கோரிக்கைகளை முன்வைத்து பேசவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.இலங்கைத் தீவில் சீனாவின் மேலாண்மை அதிகரிக்கக் கூடாது என்பதில் மேற்கைப் போன்றே இந்தியாவும் தீவிர அக்கறை செலுத்துகிறது. அதேவேளை, தன்னை மீறி வேறு எந்தவொரு சக்தியும் இலங்கைத் தீவில் ஆதிக்கம் செலுத்திவிடக்கூடாது என்பதிலும் அது கவனமாகவுள்ளது. சிறீலங்கா அரசாங்கம் சீனாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் சென்றுவிடக்கூடாது என்பதைக் காரணங்காட்டி, இந்தியா சர்வதேச அரங்கில் சிறீலங்காவை பாதுகாத்து வருகிறது. அதேவேளை, சிறீலங்கா அரசாங்கத்தை தனது காட்பாட்டிற்குள் வைத்திருப்பதற்கான அழுத்தம் கொடுக்கும் கருவியாக தமிழ்த் தேசத்தின் அரசியலை இந்தியா பயன்படுத்த வேண்டிய தேவையும் முன்னரை விடவும் வளர்ந்து வருகிறது. ஆயினும், அதனை மேற்கொள்வதற்கு சவாலாக தமிழ் மக்களின் இன்றைய மனோநிலையுள்ளது. ஏனெனில், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை தோற்கடித்தில் இந்தியாவின் வகிபாகம் உள்ளது என்ற ஆழமான கருத்துருவாக்கமே அதற்கான காரணமாகும்.இதனை முறியடிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக, தமக்குச் சார்பான தமிழ் அரசியல் தலைமைகள் ஊடாக, இந்தியாவே பலம் வாய்ந்த விடுதலைப் புலிகளை அழித்ததுடன், சிறீலங்கா அரசாங்கத்தின் மீதும் செல்வாக்கு செலுத்தக்கூடிய ஒரே சக்தியான நிலையிலுள்ளது என்ற கருத்துருவாக்கத்தை அது உண்டுபண்ணமுற்படுகிறது. இதனூடாக, தமிழ் அரசியல் தலைமைகள் இந்தியாவின் நிகழ்ச்சி நிரலுக்கு இணங்கியே செல்ல வேண்டும் என்பதை இந்தியா வலியுறுத்த முயற்சிக்கிறது. இதற்கான உத்தியாக, தமிழர்களை தோல்வி மனப்பான்மைக்குள் தக்க வைத்து, இந்தியாவின் தயவிலேயே தமிழர்கள் வாழவேண்டும் என்ற கருத்துருவாக்கத்தை மேற்கொள்வதில் இந்தியா குறியாகவுள்ளது. அத்துடன், 13ஆவது அரசியலமைப்புத் திருத்த சட்டத்தின் அடிப்படையிலான மாகாண சபைகளையே தீர்வாகத் திணிப்பதில் இந்தியாவும், மேற்குலகும் ஒரே நிலைப்பாட்டிலேயே உள்ளன.தனியே தமிழ்த் தேசத்தினை ஓர் கருவியாகப் பயன்படுத்தி சர்வதேச நலன்கள் மட்டும் பேணப்பட்டு தமிழ்த் தேசத்தின் நலன்கள் அடையப்படாது புறக்கணிக்கப் படுவதை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அதற்காக சர்வதேச தரப்புக்களின் நலன்களுக்கு எதிராகச் செயற்படவேண்டிய நோக்கமும் எம்மிடம் இருக்கக்கூடாது. அதேவேளை சர்வதேசத்தின் நலன்களும் தமிழ் மக்களின் நலன்களும் ஒருங்கே அடையத் தக்க ஒரு புள்ளியில் நாம் இருதரப்பும் சந்திக்கவேண்டும் என்பதே இன்றைய தேவையாகும். சர்வதேச நலன்களும் தமிழர் தரப்பு நலன்களும் ஒரு பொது வேலைத் திட்டத்தில் அடையத் தக்கதான சந்தர்ப்பங்கள் பலவுள்ளன. அதனை அடையாளப்படுத்துவதே தமிழ்த் தலைமைகளது வேலையாகும். ஆகவே இதனை மையமாக வைத்து செயற்பட வேண்டியதே தமிழ் தலைமைகள் முன்னுள்ள இன்றைய சிறந்த இராஜதந்திரமாகவும் அமைகின்றது.
8:31 AM | Posted by
Tamil National Peoples Front
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சட்டத்தரணியுமான மாமனிதா் நடராஐா ரவிராஐ் அவா்கள் படுகொலை செய்யப்பட்ட ஐந்தாம் ஆண்டினை நினைவு கூரும் நிகழ்வு 07-12-2011 பிற்பகல் 2 மணி தொடக்கம் 4.00 மணிவரை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.நிகழ்வுக்கு அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவா் எட்வேட் ஆனந்தராஐா அவா்கள் தலைமை தாங்கினார். இந்நிகழ்வில் ஊடகவியலாளா்கள், மாணவா்கள், பொது மக்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா்கள் உட்பட பலா் கலந்து கொண்டு மாமனிதருக்கு வணக்கம் செலுத்தினா். நிகழ்வின் ஆரம்பத்தில் மாமனிதா் ரவிராஐ் அவா்களது திருவுருவப்படத்திற்கு யாழ் மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினா் திருமதி மரிய கொறற்ரி அவா்கள் அணிவித்து வைத்தார்.தொடா்ந்து ஈகச் சுடா் ஏற்றும் நிகழ்வு இடம்பெற்றது.ஈகச் சுடா் ஏற்றும் நிகழ்வை தொடா்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது. ரவிராஐ் அவா்களது ஞாபகார்த்தமாக கடந்த காலங்களில் பாதிக்கப்பட்ட 13 ஊடகவியலாளா்களது குடும்பங்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து உதவித் தொகைகளை வழங்கப்பட்டது.திரு. எட்வேட் ஆனந்தராஐா அவா்களது தலைமை உரையினை தொடா்ந்து பரமேஸ்வரன், பொன்ராஐா, தயாபரன் ஆகியோரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் உபதலைவருமான பத்மின சிதம்பரநாதன், ஆகியோரும் உரை நிகழ்த்தினா்.
8:22 AM | Posted by
Tamil National Peoples Front
சிறீலங்காப்படையினரின் போர் நடவடிக்கையில் அங்கவீனர்கள்ஆக்கப்பட்டு இயங்க முடியாத நிலையில் உள்ள உறவுகளுக்கு கனடாவாழவைப்போம் அமைப்பின் ஏற்பாட்டில் உதவிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றனஅந்தகவையில் மேலும் பலபாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
8:55 AM | Posted by
Tamil National Peoples Front
தற்போது நடைபெற்று வரும் கூட்டமைப்பு - அரசு இடையிலான பேச்சுவார்த்தை சிறுபிள்ளைத் தனமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தனித் தேசியஇனம் என்ற நிலை அங்கீகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளே தமிழர்களுக்கு கௌரவமான தீர்வைப் பெற்றுத்தரும் எனவும் தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கட்சியாக சமகாலத்தில் இருந்து வருகின்றது என்பதை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.ஒரு முறை பேச்சுக்களில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பின்னர் நிபந்தனைகளை கூறி அது நிறைவேற்றப்படுகிறதோ இல்லையோ மீண்டும் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்வதுமாக நடந்து கொண்டிருக்கின்றது.இது இராஜதந்திர நடவடிக்கை என்றோ வேறு பெயர் கொண்டோ அழைக்க முடியாது. சிறுபிள்ளைத்தனமாக நடவடிக்கை என்றே கூறவேண்டும்.தமிழர்கள் தனித்தேசம் என்ற இறைமையை அங்கீகரிக்காமல் இழிவு படுத்தும் வகையில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை ஓப்புக் கொள்ளும் வகையிலேயே கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. அதாவது தமிழர்கள் இழிந்த இனம் என்ற நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பும் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலையில்தான் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு அரசாங்கத்திடம் கையேந்தும் நிலையில்தான் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கின்றது.இவ்வாறு கூட்டமைப்பு பெறுகின்ற தீர்வென்வது தமிழர்கள் எதிர்பார்ப்பதைப்போன்று கௌரவமான தீர்வாக அமையாது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அது இறுதியில் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கும் என்பதை நாம் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.வெறுமனே கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்துக் கொண்டிருக்கும் விமர்சகர்களாக நாம் இருந்து விடவில்லை. நாம் சொல்லுகின்ற விடயங்கள் எதிர்காலத்தில் நிதர்சனமாகும்,கூட்டமைப்பு இன்று தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தப் பேச்சுவார்த்தை மேடை சிறந்த எடுத்துக் காட்டாகும்.எனவே தமிழ்தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையில் நடைபெறும் பேச்சுக்கள் ஒருபோதும் தமிழருக்கான கௌரவமான தீர்வை பெற்றுத் தராது.இந்த விடயத்தில் இனியாவது கூட்டமைப்பு சுயநலத்தை விட்டுச் செயற்படவேண்டும் என்றார்.
7:20 AM | Posted by
Tamil National Peoples Front
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில் தெரிவித்திருந்தேன். ஏற்கனவே எழுதியிருந்த கட்டுரைகளில் இலங்கையில் தமது நலன்களை நிலைநிறுத்துவதற்காக முனைகின்ற சர்வதேச நாடுகளை, அமெரிக்கா தலைமையிலான மேற்கு,இந்தியா, சீனா என முத் தரப்பாக பிரித்துக் காட்டியிருந்ததுடன், அந்தத் தரப்புக்கள் தத்தம் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கும், முன்நகர்த்துவதற்கும் எவ்வாறான உத்திகளைக் கையாள்வர் என்பதனையும் விளக்கியிருந்தேன்.இலங்கையில் இடம்பெற்ற சமாதான முயற்சிகள் தொடர்பாக, நோர்வே வெளிவிவகார அமைச்சால் நடத்தப்பட்ட நிகழ்வொன்றில் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் துணை இராஜாங்கச் செயலாளர் ரிச்சட் ஆமிடேச், இதுவரை காலமும் இராஜதந்திர வட்டங்களால் மூடிமறைக்கப்பட்ட உண்மையொன்றை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது இலங்கைத் தீவில் தற்போது சர்வதேச சமூகத்தினுடைய அக்கறை அதிகரித்து வருகின்றது எனவும், அதற்கு வல்லாதிக்க சக்திகளின் போட்டித் தன்மையே காரணமெனவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.இவ்விடயம் பற்றி மேலும் கருத்துத் தெரிவித்த ரிச்சட் ஆமிடேச், இந்தியா ஏற்கனவே இலங்கை மீது நிரந்தரமான அக்கறையினையே செலுத்தி வந்திருக்கிறது. இது வெளிப்படையாகத் தெரிந்த விடயமும் கூட. ஆனால், தற்போதைய நிலையில் இலங்கைத் தீவை மையப்படுத்தியதாக போட்டித் தன்மையொன்று காணப்படுகின்றது. இலங்கையை மையப்படுத்திய இந்தியா, சீனா,அமெரிக்கா போன்ற சர்வதேச சக்திகளின் போட்டியானது, இலங்கையினை முன் வரிசையின் மையத்தில் நிறுத்தியுள்ளது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.ரிச்சட் ஆமிடேச் வலியுறுத்திய மேற்கூறிய கருத்தினை இங்கு மீள நினைவு படுத்துவதானது, ஏற்கனவே என்னால் எழுதப்பட்ட பத்திகளிலும், அதற்கு முன்பான சந்தர்ப்பங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியால் வலியுறுத்தப்பட்ட கருத்தினை மீள நிரூபிப்பதாகவே அமைகின்றது.எனவே இலங்கைத் தீவினுள் தமது நலன்களின் அடிப்படையில் தலையிடுகின்ற மூன்று சர்வதேசத் தரப்புக்களினதும் நிகழ்ச்சி நிரல் பற்றி ஆராய்வதாக இவ் வார பத்தி அமைகின்றது. முதலாவதாக இலங்கைத் தீவினுள் தலையீட்டைக் கொண்டுள்ள சர்வதேசத் தரப்புக்களுக்கு இத் தீவு எவ்வாறான பூகோள முக்கியத்துவம் உடையதாகக் காணப்படுகின்றது என்பதை இவ்விடத்தில் ஆராய்வது அவசியமாகும்.உலகின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்து சமுத்திரத்தின் மத்தியில், புவியல் ரீதியாக முக்கியத்துவம் மிக்க ஓர் இடத்தில் இலங்கைத் தீவு அமைந்துள்ளமையானது, அதற்கு பூகோள அரசியலில் அதி முக்கிய வகிபாகத்தை வழங்குகின்றது.சர்வதேச கடல்வழிப்பாதைகளில், இந்து சமுத்திரமானது மிக முக்கியத்துவமானதாக உள்ளது. இதனை பின்வரும் உதாரணங்கள் வாயிலாக நாம் புரிந்துகொள்ள முடியும். உலகின் எண்ணை விநியோகக் கப்பல்களில் மூன்றில் இரண்டு பங்கானவையும், கொள்கலன் கப்பல் சேவைகளில் ஐம்பது வீதமானவையும், இந்து சமுத்திரத்தின் வாயிலாகவே பயணிக்கின்றன. மூன்றிலொரு பங்கான பேரளவுக் கப்பல்களும் (Bulk Carrier) இந்து சமுத்திரத்தின் வாயிலாகவே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. இவ்வாறாக முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறுபட்ட கடல்வழிப் போக்குவரத்துக்கள் இந்து சமுத்திரத்தில் முக்கியத்துவம் மிக்க இலங்கைத் தீவினை மையப்படுத்தியே இடம்பெறுகின்றன. இவற்றை விட உலகில் நாற்பது சதவீமான கனிய எண்ணை உற்பத்தியும் இந்து சமுத்திரத்திலேயே நடைபெறுகின்றது.பொருளாதர கடல்வழிப் போக்குவரத்து என்பதற்கு அப்பால், இந்து சமுத்திரத்தின் கேந்திர முக்கியத்துவம் என்பது பாதுகாப்பு விவகாரங்கள் என்பதன் அடிப்படையிலும் பார்க்கப்படவேண்டிய விடயமாகும். இந்து சமுத்திரத்தில் யார் ஆதிக்கம் செலுத்துகின்றார்களோ அவர்களே ஆசியாவிலும் ஆதிக்கம் செலுத்தத்தக்கதாக அமையும் என பத்தொன்பதாம் நூற்றாண்டின் அமெரிக்காவின் தலைசிறந்த பூகோள அரசியல் நிபுணராகக் கருதப்படுகின்ற ரியர் அட்மிரல் அல்பிரட் தயர் மாகன் (Rear Admiral Alfred Thayer Mahan) வலியுறுத்தியுள்ளார். ஆகவே, உலகின்; தலைவிதியானது இந்து சமுத்திரத்திலேயே தீர்மானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. அடுத்து இப் பத்தியில் இலங்கை மீது தமது நலன்களை நோக்காகக் கொண்டு தலையிடுகின்ற நாடுகளின் நலன்சார் போட்டிகள் குறித்து தனித் தனியே விளங்கிக் கொள்ளவேண்டியுள்ளது.
சீனாவின் நலன்சார் போட்டி
சீனாவின் பொருளாதாரத்தில் இந்து சமுத்திரம் முக்கிய வகிபாகத்தைக் கொண்டுள்ளது. சீனாவின் பெருளாதரத்திற்கு வேண்டிய பெரும்பாலன அளவு கனிய எண்ணை போன்ற சக்தி வளங்கள் இந்து சமுத்திரத்தின் வாயிலாகவே எடுத்துச் செல்லப்படுகின்றன. மீண்டும் சீனாவில்; உற்பத்தி செய்யப்பட்ட முடிவுப் பொருட்களை சர்வதேச சந்தைக்கு அனுப்புவதற்கும் இந்து சமுத்திரமே கடல்வழிப் பாதையாகவுள்ளது. இவ்வாறாகப் பொருளாதார ரீதியில் முக்கியத்துவமுடைய கடல்வழி மார்க்கத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டியது சீனாவின் தற்போதைய இருப்பினை நிலைகொள்ளச் செய்வதற்கும், எதிர்கால வளர்ச்சிக்கும் அடிப்படையானது.இதனடிப்படையில் தனது நாட்டின் கடல்வழிப் போக்குவரத்திற்கு முக்கியமானதென இனங்கானப்பட்ட இடங்களில் சீனா அதிக அக்கறையைச் செலுத்தி வருகின்றது. இவ்வாறாக அக்கறைக்கு உரிய இடங்கள் “முத்துக்கள்” எனவும், அவற்றை ஒருங்கிணைத்து தமது கட்டுப்பாடுகளின் கீழ் கொண்டுவரும் திட்டத்தினை “முத்துமாலை”திட்டம் எனவும் (String of Pearls)வர்ணிக்கப்பட்டு வருகின்றது. சீனாவின் இம் முத்துமாலைத் திட்டத்தின் கீழ், தென் சீனக் கடல் மலாக்கா நீரினை வழியாக,இந்து சமுத்திர கடல் வழியைத் தாண்டி அரேபியக் கடல், பாரசிகக்குடா வரையான கடல் வழிப்பாதைகள் உள்ளடக்கப்பட்டு முத்துமாலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. சீனாவின் “முத்துமாலை”திட்டத்தில் முத்துக்களாக கைனான் தீவு, வியடனாமின் மேற்குக் கரையை அண்மித்த வுடி தீவு, மியன்மாரில் சிட்வே எனும் இடம், பங்களாதேசின் சிட்டகோங், மாலைதீவில் மரா ஒ தீவு, இலங்கையில் அம்பாந்தோட்டை, பாக்கிஸ்தானில் குவார்டா போன்ற இடங்களை நாம் குறிப்பிட்டுக் கூறமுடியும். இந்த இடங்களிளை மையமாகக் கொண்ட நாடுகளில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த உறவுகளைக் கட்டியெழுப்புவதுடன் தனது ஆதிக்கத்தினை நிலை நிறுத்தத் தக்கவகையிலும் தனது திறன்களை சீனா அதிகரித்து வருகின்றது.
இந்தியாவின் நலன்சார்போட்டி
சீனா போன்று இந்தியாவும் உலகத்தில் வளர்ந்து வருகின்ற ஓர் வல்லரசாகவே கருதப்படுகின்றது. தன்னுடைய அயல் பிராந்தியத்தில் இருக்கின்ற நாடுகள் தனது ஆதிக்கத்தின் கீழ் மட்டுமே இருக்கவேண்டும் என்ற தேவை இந்தியாவுக்கு உள்ளது. இதற்கு இந்தியாவின் பாதுகாப்பு நோக்கமே காரணமாகும். இந்த வகையில் தனது அயல் பிராந்தியங்களில் வேறு எந்தவொரு வல்லரசும் இருப்பினைக் கொண்டிருப்பதோ அல்லது செல்வாக்கினைக் கொண்டிருப்பதோ, தனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என இந்தியா கருதுகின்றது.இவ்வாறான காரணங்களோடு, இப் பத்தியில் முன்னர் குறிப்பிடப்பட்ட சீனாவின் “முத்துக்களாக”க் கருதப்படுகின்ற இடங்களை எடுத்துக்கொண்டால், அவை இந்தியாவை சுற்றிவளைப்பதாக இருப்பது கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். இந்தச் சூழ்நிலையில் தனது “முத்துமாலை” வியூகம் இந்தியாவை இலக்கு வைத்ததல்ல எனச் சீனா கூறிக்கொண்டாலும், இந்தியாவைச் சுற்றியிருக்கும் “முத்துக்கள்”; இந்தியாவை பலவீனப்படுத்துவதற்காகவே அமையும் என இந்திய கொள்கை வகுப்பாளர்களால் பரவலாக நோக்கப்படுகின்றது.சீனாவின் “முத்துமாலை”த் திட்டத்தினால் தற்போது இந்தியாவுக்கு ஆபத்து இல்லாவிட்டாலும், அது பின்னரான காலப்பகுதியில் இந்தியாவின் சுயபாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாகவே அமையும் என இந்திய கொள்கை வகுப்பாளர்களால் கருதப்படுகின்றது. இலங்கையில் வளர்ந்து வரும் சீன ஆதிக்கம் தொடர்பில் இந்தியாவிற்கு குறிப்பிட்டதோர் பிரச்சினையுண்டு. தனது வட மேற்குஇவடக்குஇவட கிழக்கு எல்லைகளில் இந்தியாவிற்கு அதிகளவு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தமது மிக முக்கியமான தந்திரோபாயம் சார்ந்த வளங்களை தென்னிந்தியாவில் நிலைப்படுத்திவருகின்றது. இந்நிலையில்; இலங்கையில் சீன ஆதிக்கம் வளர்வதானது தென் இந்தியாவில் உள்ள இவ் வளங்களுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என இந்திய பாதுகாப்பு ஆய்வாளர்கள் கருதுகின்றனர். 1980 காலப் பகுதியில் இந்தியாவின் நலன்கள் பாதிக்கப்படும் வகையில் இலங்கைத்தீவு அமரிக்காவுடன் நெருக்கமான தொடர்பினை ஏற்படுத்த முயன்றபோது அதனைக் கட்டுப்படுத்துவதற்காக தமிழ் ஆயுதப் போராட்ட அமைப்புக்களைப் பலப்படுத்தி இந்தியா நொருக்கடிகளை ஏற்படுத்தியமை இங்கு நோக்கத்தக்கது.எனவே தான், தனது ஆதிக்கத்தின் கீழ் இருக்கவேண்டிய நாடுகளில் வேறு சக்திகள் ஆதிக்கம் செலுத்தக்கூடாது என்பதுவே இந்தியாவின் தேவையாகும்.
அமெரிக்காவின் நலன்சார் போட்டி
இரண்டாம் உலக மகாயுத்தத்திற்கு பின்னரான காலப் பகுதியில், சோவியத் யூனியனையும் அமெரிக்காவையும் மையமாகக் கொண்டு உலகம் இரு துருவமாக இருந்த கால கட்டத்திலும், இந்து சமுத்திரக் கடல்பரப்பில் அமெரிக்காவே ஆதிக்கம் செலுத்தியது. பனிப்போருக்குப் பின்னரான காலப்பகுதியில் அமெரிக்கா தனிப் பெரும் வல்லரசாக உருவெடுத்தபோது இந்நிலை மேலும் உறுதிப்படுத்தப்பட்டது. அண்மைக்காலமாக அமெரிக்காவின் இந்த முழுமையான ஆதிக்கப்பிடிக்கு சவால் விடுக்கும் வகையில் தாமும் வல்லரசாகும் கனவுகளோடு பல சக்திகள்(குறிப்பாக சீனா, இந்தியா ) வெளிக் கிளம்பியிருக்கும் காலமிது. இதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாகவே தோன்றுகின்றது.தற்போதைய வளர்ச்சி வேகத்தினை சீனா தக்கவைக்குமாயின் 2035-2050 காலப்பகுதியில் அமெரிக்காவை விஞ்சிய மிகப் பெரும் பெருளாதார பலம் கொண்ட நாடாக சீனா அமையலாம் என ஆய்வாளர்களால் மதிப்பிடப்படுகின்றது.அமெரிக்கா தன்னுடைய வல்லரசு ஆதிக்கத்தினை உலக ஒழுங்கில் நீடிப்பதற்கும், ஏற்கனவே இருக்கின்ற நலன்களை இலங்கைத் தீவில் பாதுகாப்பதற்கும் ஏற்றவாறு இன்று செயற்படவேண்டியுள்ளது. அமெரிக்கா தனது தனியாதிக்கத்தினை தக்கவைப்பது என்ற இடத்திலேயே அமெரிக்காவுக்கும் சீனா போன்ற நாடுகளுக்கும் இடையில் போட்டித் தன்மை ஏற்படுகின்றது.அண்மைக்காலம் (விசேடமாக 2005 இறுதி காலப்பகுதி) வரைக்கும் இலங்கைத் தீவானது அமெரிக்காவின் ஆதிக்கம் செலுத்தப்படத் தக்க நாடாகவும், அமெரிக்காவின் நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளத் தக்கதாகவுமே நிலைமைகளைக் கொண்டிருந்தது. அதேவேளை அமெரிக்காவின் நலன்கள் பாதுகாக்கப்படத்தக்க வகையில் மாற்றங்களுக்கும் இலங்கை இசைந்து கொடுத்திருந்தது. எனினும் 2005 இறுதிக்காலப் பகுதிக்குப் பின்பான நிலையில் (மகிந்த ராஜபக்ச பதவியேற்றதன் பின்), இலங்கைத் தீவில் சீனாவின் ஆதிக்கம் அதிகமாகச் செலுத்தப்படுவதற்கு இடமளிக்கப்படும் நிலையுள்ளது. மறுபுறம், இதேகாலப்பகுதியில் இலங்கைத் தீவின் சிங்கள தேசத்தவர்கள் மத்தியில் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக நாடுகள் தமது எதிரிகள் என்ற கருத்தும் வலுப்பெற்றுவருகின்றது.
இலங்கையை மையப்படுத்திய சர்வதேச அரசியல் போட்டிகள்
தற்போதைய சர்வதேச அரசியல் ஒழுங்கில் இந்தச் சக்திகளினது போட்டியானது நேரடி யுத்தமாக வருவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவு. ஆகவே தாம் ஆதிக்கம் செலுத்த விரும்பும் நடுகளின் உள்ளுர் நிலைமைகளை (அரசியல் தரப்புக்கள் உட்பட) தமக்கு ஏற்றவாறு பயன்படுத்தி இம் மோதல் நடைபெறுகின்றது. இவைகள் தான் இலங்கைத் தீவை மையப்படுத்திய சர்வதேச அரசியலும் போட்டியுமாகும்.எனவே தான் இந்தப் போட்டியில் இந்தியாவும், அமெரிக்கா தலைமையிலான மேற்கும் தமிழ் அரசியலை தமது நலன்களை நோக்காகக் கொண்டு சிறந்த ஓர் கருவியாக பாவிக்கும் நிலையுள்ளது. அமெரிக்காவைப் பொறுத்தவரையில், அது உலகில் இப்போதைக்கு இருக்கும் வல்லரசு என்ற வகையில், தன்னிடம் இருந்து விலகிச் செல்லும் இலங்கைத் தீவை தனது நலன்சார்ந்ததாக கொண்டுசெல்வதற்கு முயற்சிக்கின்றது. இதற்கு தமிழ் அரசியல் உட்பட பல அழுத்தங்களை கருவிகளாகப் பிரயோகிக்கும் நிலையிலும் அது உள்ளது. இந்தியா இலங்கை மீது தமது நலன்களை காப்பதற்கு வழியாக பல கருவிகள் தன்வசம் கொண்டிராத நிலையில் அது தமிழ் அரசியல் என்ற ஒன்றையே சிறந்த கருவியாகப் பிரயோகிக்கக் கூடியதாக உள்ளது.இவ்வாறான ஒரு சூழ்நிலையில் தமிழ் அரசியலுக்குக் கிடைக்கின்ற முக்கியத்துவத்தினை சரிவர விளங்கிக் கொண்டு எமது மக்களின் அரசியலை முன்னெடுக்கவேண்டும். இதனை அனைத்துத் தமிழ் மக்களும் புரிந்துகொள்ள வேண்டும். இதுவே தமிழ் அரசியல் தலைவர்களால் எம் மக்கள் தவறாக வழிநடத்திச் செல்லப்படுவதைத் தடுப்பதற்கான வழியாகும். எம்முடைய தேசத்தின் வெற்றி எம்முடைய அரசியல் கொள்கை உறுதிப்பாட்டிலேயே தங்கியுள்ளது.
சீனாவின் பொருளாதார போட்டி,இந்தியாவின் பாதுகாப்பு போட்டி,அமெரிக்காவின் வல்லரசுப் போட்டி,என இலங்கையை மையப் படுத்திய, சர்வதேச அரசியல் போட்டிகள், தமிழர் தரப்பிற்கு சாதகமான அரசியற்சூழலையையே தக்கவைத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
December
(6)
- நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெறும் கண்துடைப்பு - த...
- சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவ...
- மாமனிதா் நடராஐா ரவிராஐ் அவா்கள் படுகொலை செய்யப்பட்...
- கனடா வாழவைப்போம் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக...
- கூட்டமைப்பு - அரசு இடையிலான பேச்சுவார்த்தை சிறுபிள...
- சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் இலங்கைத் தீவின் ...
-
▼
December
(6)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?











