கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணாவு பூர்வமாக கலந்துகொண்டு தங்கள் உணர்வுகளை வெளிக்காட்டியுள்ளார்கள்.தமிழ் சமூகமும் கனடியத்தமிழ் மாணவர் சமூகமும் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்வில் லிபரல் கடசியைச் சோந்த ஏஸஜின்கோட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானிஸ், (JimKarygiannis Member Parliament from Scarborough-agincourt) என்டீபி கடசியைச் சேர்ந்த பீறேமலியா கோர் - ழேல்ரன் தொகுதி ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் யக்மீற் சிங்  (Jagmeet Singh, MPP) (Bramalea--Gore—Malton) ஆகியோர் உட்பட பல அரசியலாளர்களும், 180 அமைப்புகளை பிரதிநித்துவப்படுத்தும் கனடிய தேசிய அமைப்புகளில் ஒன்றான சமாதானத்துக்கான கனடியக் கூட்டமைப்புபேச் சேர்ந்த (The Canadian PeaceAlliance)  பத்துப் பிரதிநிதிகளும், கனடிய மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதிகள் கனடியத்தமிழ் அமைப்புகளின்பிரதிநிதிகள் உட்பட பலர் வருகைதந்து உரைநிகழ்தியுள்ளார்கள்.பாரளுமன்ற உறுப்பினர் ஜிம் கரியானிஸ் அவர்கள் உரையாற்றும்போது சிறிலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றம் சம்பந்தமாக சர்வதேச விசாரனைமேற்கொள்ளப்பட வேண்டும் என வலயுறுத்திப் பேசினார்.ஒன்ராறியோ நாடாளுமன்ற உறுப்பினர் யக்மீற்சிங் உரையாற்றும்போது தமிழ் மக்கள் தமது சுயநிர்ணய உரிமைக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்றும் சீக்கிய மக்களும் இணைந்து குரல் கொடுப்பார்கள் என்று பலத்த கரகோசத்தின் மத்தியில் உரையாற்றினார்.முதன்மையானவர்களின் உரைகளுடன் தேசிய எழுச்சியை பிரதிபலிக்கும் நடனங்கள், நாடகம் மற்றும் வானம்பாடிகளின் இசைநிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுநிகழ்வில் தேசியத்தலைவரின நிழற் படத்துடன் தமிழீழத் தேசியக்கொடி, கனடியத்தேசியக்கொடி மற்றும் மஞ்சல்சிவப்பு வர்ணக் கொடிகளையும் மக்கள் தாங்கி நின்றனர்.பல்லாயிரக்கணக்கில் இதில் கலந்தகொண்டதன்மூலம் தமிழ் மக்களின் தேசிய உழுச்சியை எந்த சக்தியாலும் மழுங்கடிக்கமுடியாது என்பதை மீண்டம் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளனர். ரொறன்ரோவில் மாலைநேரத்தில் குளிர் காணப்பட்டபொதும் பல்யிரப்பணக்கான மக்கள் நிகழ்வில்கலந்துகொண்டுள்ளனர் இறுதியில் பொங்கு தமிழ் தீர்மானம் பிரகடனப்படுத்தப்பட்டு உறுதிமொழியுடன் நிகழ்வு நிறைவுபெற்றது.



















Powered By: TNPF

பார்வை