7:00 AM | Posted by
Tamil National Peoples Front
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில் திரண்டது.பல்வேறு நாடுகளில் இருந்து பொங்குதமிழ் உரிமை முழக்கத்திற்கு பல்லாயிரக்கணக்கில் திரண்டு உரிமைக் குரலை ஓங்கி ஒலித்தார்கள்.ஜெனீவா தொடரூந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பூங்காவில் இருந்து ஆரம்பித்த பேரணி ஐ.நா சபை முன்றல்வரை சென்றது. ஐ.நா சபை முன்றலில் உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நிகழ்வுகள் நடைபெற்றது.3.00 மணியளவில் ஜெனீவா ஐ.நா சபை முன்றலை வந்தடைந்த மக்கள் பெருவெள்ளம், மேடையின் முன் ஒன்றுதிரண்டது. கொடியேற்றல் நிகழ்வு, ஈகைச்சுடர் ஏற்றல் நிகழ்வுகள் என்பன அடுத்ததாக இடம்பெற்றன. சிறீலங்கா இறுதி யுத்தத்தை நிறுத்தக்கோரி, ஐ.நா முன்றலில் தன்னை தீயுடன் ஆகுதியாக்கிக்கொண்ட ஈகை பேரொளி முருகதாசன் உட்பட, தமிழகத்தில் ஈழத்தமிழர்களின் விடுதலைக்காக உயிர்தியாகம் செய்தோரின் ஈகைச்சுடரொளி ஏற்றல் வைபவம் அடுத்து இடம்பெற்றது.
அங்கே வலியுறுத்தப்பட்ட விடையங்களும் நிகழ்வுகளும் பின்வருமாறு...
1. தமிழரின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனிநாட்டை இலங்கைத் தீவிற்குள் அமைப்பதற்கான வெகுசன வாக்கெடுப்பை ஐ.நாவின் கண்காணிப்பில் நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
2. தற்காலிக முகாம்களில் உள்ள மக்களையும், சிறையில் உள்ள போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், நிபந்தனையின்றி சொந்த இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் அவர்கள் குடியமர்த்த வேண்டும்.
3. தமிழரின் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா படையினர் வெளியேற்றப்படுவதுடன், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
4. சனல்- 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய �சிறீலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தையும், மேலதிகமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணங்களையும், மற்றும் நேரடிச் சாட்சிகளையும் போர்க்குற்ற சாட்சியங்களாகக் கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்தினை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த சகல நாடுகளும் ஆலோசனை வழங்க வேண்டும்.
5. முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைத்து அவர்களின் கருணை மனுவை இந்திய அரச அதிபர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
6. சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளும் சிறீலங்கா அரசாங்கத்துடனான நட்புறவை அனைத்துலகமும் துண்டிக்க வேண்டும்.
7. மேற்க்கூறப்பட்ட கோரிக்கைள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை புலம்பெயர் நாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
1. தமிழரின் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்பவற்றின் அடிப்படையில் ஒரு தனிநாட்டை இலங்கைத் தீவிற்குள் அமைப்பதற்கான வெகுசன வாக்கெடுப்பை ஐ.நாவின் கண்காணிப்பில் நடாத்துவதற்கு ஆவன செய்ய வேண்டும்.
2. தற்காலிக முகாம்களில் உள்ள மக்களையும், சிறையில் உள்ள போராளிகளையும் உடனடியாக விடுதலை செய்வதுடன், நிபந்தனையின்றி சொந்த இடங்களில் உரிய அடிப்படை வசதிகளுடன் அவர்கள் குடியமர்த்த வேண்டும்.
3. தமிழரின் தாயகப் பிரதேசங்களில் இருந்து சிறீலங்கா படையினர் வெளியேற்றப்படுவதுடன், அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.
4. சனல்- 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய �சிறீலங்காவின் கொலைக்களம் என்ற ஆவணப்படத்தையும், மேலதிகமாகக் கிடைக்கப்பெற்ற ஆவணங்களையும், மற்றும் நேரடிச் சாட்சிகளையும் போர்க்குற்ற சாட்சியங்களாகக் கொண்டு, சிறீலங்கா அரசாங்கத்தினை அனைத்துலக நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்த சகல நாடுகளும் ஆலோசனை வழங்க வேண்டும்.
5. முன்னாள் இந்தியப் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையைக் குறைத்து அவர்களின் கருணை மனுவை இந்திய அரச அதிபர் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
6. சர்வதேச நாடுகளின் ஆலோசனைகளைப் புறந்தள்ளும் சிறீலங்கா அரசாங்கத்துடனான நட்புறவை அனைத்துலகமும் துண்டிக்க வேண்டும்.
7. மேற்க்கூறப்பட்ட கோரிக்கைள் நடைமுறைப்படுத்தப்பட்டு தமிழர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்வரை புலம்பெயர் நாடுகளில் ஏதிலித் தஞ்சம் கோரியவர்களை திருப்பி அனுப்புவதை நிறுத்த வேண்டும்.
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து நிகழ்த்தப்பட்ட பொங்குதமிழ் உரிமைமுழக்கப் பேரணியில் பல்லாயிரக்கணக்கிலான தமிழர்கள் கலந்து கொண்டிருந்தனர்.காலத்தின் தேவை இது கலங்கிக் கிடக்கும் தமிழர் அல்ல நாம் கைகோர்த்து நீதி கேட்போம் வாரீர்... என விடுக்கப்பட்ட ஒற்றை அழைப்பினை ஏற்றுக்கொண்டு ஜெனீவா வீதிகளில் அணிதிரண்ட தமிழர் பெரும்படை கண்டு சிங்களம் சித்தம் கலங்கிப் போயுள்ளது.முள்ளிவாய்க்காலில் எல்லாமும் முடிந்துவிட்டதாக எதிரிகளும் துரோகிகளும் கொட்டொலி எழுப்பி கொண்டாடிய போது அழுது புரண்டெழும்பிய தமிழர்கள் அல்ல நாங்கள் என்று பலதடவை கடந்த 27மாதங்களில் நிரூபித்தாகிவிட்டது.இருந்தும் எதிர்காலமே சூன்யமாகிப் போய்விட்டதாக இன்னும் சில தமிழர் கூட்டம் முடங்கிக் கிடக்கின்ற இன்றைய நிலையில் கரிகாலன் காலத்து மறவர் படையென முரசு கொட்டி ஜெனீவா முன்றலில் திரண்ட தமிழர்படை சிங்களத்தை மட்டுமல்ல முடங்கிக் கிடந்த தமிழர் கூட்டத்தையும் சிந்திக்கவைத்துள்ளது.சிறிலங்கா மீது அனைத்துலக இராசதந்திர பொருளியல் நெருக்கடிகள் அதிகரித்துவரும் இன்றைய சூழலில் தமிழர்கள் ஒன்று கூடி உரத்த குரலெடுத்து உரிமை முழக்கம் செய்திருப்பது சர்வதேசத்தை இறுத்தித் தீர்வு நோக்கி நிச்சயமாக நகர்த்தும் என்பது உறுதி.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?
















