அவர்கள் பயங்கரவாத போராட்ட பாதையை தெரிவு செய்தனர். அமெரிக்கா அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது என்றும் அவர் தெரிவித்தார்.   ஆனால் தமிழ் மக்களின் உரிமைகள் கரைந்து போன காரணத்தால்தான் விடுதலைப்புலிகள் போராட்டத்தை ஆரம்பித்தார்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது என அவர் தெரிவித்தார்.விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றதற்கு முதற்காரணம் என்ன என்பதை நாம் மறந்து விடக்கூடாது. தங்களுடைய உரிமைகள் கரைந்து போகின்றன என்று தமிழ் மக்கள் பெரிதும் விரக்தி அடைந்திருந்த நிலையில் தான் விடுதலைப்புலிகள் தோற்றம் பெற்றனர் என அமெரிக்க பிரதி இராஜாங்க செயலாளர் றொபேர்ட் ஓ பிளேக் கொழும்பில் உள்ள அமெரிக்க நிலையத்தில் பத்திரிகையாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையில் தெரிவித்தார்.உலகம் முழுவதும் இடம்பெற்ற கிளர்ச்சிகளின் வரலாறுகளை நிபுணர்கள் பலர் ஆய்வு செய்துள்ளனர். அரசாங்கங்கள் போதுமான அளவில் பொறுப்புக்கூறும் கடமையை நிறைவேற்றத்தவறியதாலும் நல்லிணக்கத்தைக் காணத் தவறியதாலும் முடிவுற்ற கிளர்ச்சிகளில் 60 சதவீதமானவை மீண்டும் ஆரம்பித்துள்ளன என்பதை ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.அதனால் தான் நாம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு ஆகியவற்றுக்கு குறிப்பாக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.இந்த இடத்தில் விடுதலைப்புலிகள் ஏன் தோற்றம் பெற்றார்கள் என்பதற்கான காரணத்தை நாம் மறந்து விடக்கூடாது. தமிழ் மக்கள் தங்களின் உரிமைகள் எல்லாம் பறிக்கபடுகின்றன என்ற விரக்தியில் இருந்த போது தான் ஏதாவது ஒருவிதமான
பயங்கரவாத போராட்டம் தான் சிறந்த தெரிவாக அதற்கு இருக்க முடியும் என்று அவர்கள் கருதினார்கள்.
அமெரிக்கா விடுதலைப்புலிகள் இயக்கத்தை பயங்கரவாத இயக்கம் என்றே பிரகடனம் செய்துள்ளதுடன் தனது நாட்டில் அதனை தடைசெய்தும் உள்ளது. இன்னும் அத்தடை நடைமுறையில் உள்ளது.
இவ்வாறான கிளர்ச்சிகள் தோன்றுவதற்கு அடிப்படையான காரணங்களையும் இவை தோன்றுவதற்கான மனக்குறைகளையும் கண்டறிந்து தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் முதற் கடமையாகும்.
அனைத்து பிரச்சினைகளுக்கும் நிலைத்து நிற்கக்கூடிய தீர்வு காணுவதன் மூலமே அனைத்து இலங்கையர்களும் சமாதானம் மற்றும் ஒற்றுமையுடனும் வாழும் நிலையை உருவாக்க முடியும்’ என்றும் பிளேக் தெரிவித்தார்.அதனால் தான் அமெரிக்கா தமிழ் மக்களின் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளான தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தையை அரசாங்கம் நடத்தவேண்டும் என்பதற்கு அழுத்தம் கொடுத்து வருகிறது என றொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்தார்.

Powered By: TNPF

பார்வை