3:07 AM | Posted by
Tamil National Peoples Front
ஈழத் தமிழ் இனத்திற்கு ஆரோக்கியமான அரசியல் தலைமை கிடைக்கவில்லை என்பது மட்டுமே பெரும் குறைபாடு என்று யாரும் நினைத்து விடக் கூடாது. மாறாக ஈழத் தமிழ் இனத்திற்கு தியாக உணர்வு கொண்ட புத்திஜீவிகளும் கிடைக்க வில்லை என்பதே நிஜம். இதைக் கூறும்போது அர்ப்பணிப்போடு செயற்பட்ட சில புத்திஜீவிகள் மனவருத்தம் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் உள்ளதாயினும் உண்மை நிலை, எங்களின் புத்திஜீவிகளும் சுயநலம் மிக்கவர்களாக இருந்தார்கள் - இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.
உலக வரலாற்றை எடுத்து நோக்கும்போது இளைஞர்களை நோக்கி சோக்ரட்டீஸ் விடுத்த தர்க்க ரீதியான அழைப்பு முதல், இந்தியாவில் மிக அண்மையில் உண்ணாவிரதமிருந்த அன்னா ஹசாரே வரை புத்திஜீவிகளே தத்தம் நாடுகளின் அரசியல், நீதி, நிர்வாகம், கல்வி, பொருளாதாரம் ஆகியவற்றை வளப்படுத்தியும், ஒழுங்கு படுத்தியும் செம்மைப்படுத்தியும் உள்ளனர் என்பதை கண்டறிய முடியும். ஆனால் எங்கள் மண்ணில் மட்டும் புத்திஜீவி என்பதற்கு வேறுவிதமான வரைவிலக்கணம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது பிரச்சினை இல்லாமல் பயபக்தியுடன் வாழ்ந்து முடிப்பது மட்டுமே ஒரு சிறந்த புத்திஜீவிக்கு அழகு என்று கருதப்படுகின்றது.இதன் காரணமாக எங்கள் இனம் இத் துணை உயிர்த் தியாகங்களைச் செய்தும் விடிவு பெற முடியாத இனமாகத் தவிக்கின்றது. இப்போது கூட தமிழ் மக்கள் தங்களின் உரிமை விடயத்தில் என்ன நடைபெறுகின்றது என்பதை அறிய முடியாதவர்களாக இருக்கின்றனர். எங்கள் பிரச்சினைக்கு எது தீர்வு என்பதை உணரமுடியாத தமிழ் அரசியல் தலைமைகளின் பரிதாப நிலையை நினைக்க இதயம் சுக்கு நூறாகிறது. இவ்வாறு எக்காலத்திலும் இல்லாத மிகக் குழப்பமான சூழ்நிலையில் தமிழ் மக்களின் அரசியல் களம் இருக்கும்போது, தமிழ் அரசியல் தலைமைகளை அழைத்து இப்படித்தான் செயற்படுங்கள் என்று சொல்வதற்கு எங்களிடம் புத்திஜீவிகள் இல்லையா? அல்லது அறிவிலார்க்கு உரைப்பவர் அவரிலும் பேதை என்ற பழமொழிக்கு அமைவாகப் பேசாமல் இருக்கிறார்களா? எதுவுமே புரியாமல் உள்ளது.எதுவாயினும் அன்பு மிகுந்த தமிழ்ப் புத்தி ஜீவிகளே! உங்களுக்குள் ஒன்றுபட்டு எங்கள் அரசியல் தலைமைகளை வழிப்படுத்துங்கள். இலங்கை அரசின் போர் வெற்றியை ஆட்சியாளர்களின் திறன் என்பதாக மட்டும் பார்க்காதீர்கள். அதற்குப் பின்னால் இருக்கக்கூடிய தென்பகுதி புத்திஜீவிகளின் வியூகங்கள், திட்ட முன்னெடுப்புகள், இராஜதந்திரோபாயங்கள் என்பனவற்றின் வலிமையை உணருங்கள். இன்னும் உறக்கம் வேண்டாம். எங்களுக்கு தரவருகிறது சர்வதேசம்.அதை வேண்டத் தெரிந்தால் போதும். உதவுங்கள். இது எல்லாவற்றையும் போரில் பறிகொடுத்த தமிழ் இனத்தின் மன்றாட்டமான கோரிக்கை.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?