வட-கிழக்கு மாற்றுத்திறனாளிகள் புனர்வாழ்வுக்கென மூன்று மில்லியன் நிதியுதவியை அமெரிக்கா வழங்கியுள்ளது.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வளர்த்துக் கொள்ளவும், வருமானத்துக்கான வழியொன்றைத் தேடிக்கொள்வதற்குமான செயற்பாடுகளை மேற்கொள்ளவே இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுமார் 1200 மாற்றுத் திறனாளிகள் வாழ்ந்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் பிறப்பிலேயே உடல் குறைபாடுகளைக் கொண்டிருந்தவர்கள் ஆவர்.அதற்கு மேலதிகமாக யுத்தத்தால் பாதிக்கப்பட்டு அவயவங்களை இழந்தவர்கள் குறித்த சரியானதொரு கணக்கெடுப்பு இதுவரை மேற்கொள்ளப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.தற்போதைய நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் நடவடிக்கைகள் ஐந்து உள்ளுர் அமைப்புகளின் துணையுடன் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதற்கான அணுசரணையாகவே அமெரிக்கா மூன்று மில்லியன் நிதியுதவியை வழங்கியுள்ளது.

Powered By: TNPF

பார்வை