கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறிய அளவில் கற்றல் உபகரணங்களை வழங்கி கல்வியை மேம்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட கனடா வாழ வைப்போம் அமைப்பின் மனித நேயப்பணியானது எமது தாயக உறவுகளின் மிகுந்த ஆதரவினால் வளர்ச்சி கண்டது.நவம்பர் 27க்கு முன்னர் போரினால் பாதிக்கபட்ட 250 குடும்பங்களுக்கு உதவும் மிகப் பெரும் திட்டத்தை எமது மக்களின் ஆதரவுடன் முன்னெடுத்தோம்.லண்டனில் இருந்து உதவிய கண்ணன் எனும் உறவைப் போன்ற நல்லுள்ளம் படைத்தவர்களின் உதவியுடன் 150 குடும்பங்களுக்கு முதற்படியாக உதவுவதற்கு ஆதரவு கிடைந்துள்ளது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை கனடா வாழ வைப்போம் அமைப்பினர் உலகுக்கு பறைசாற்றியுள்ளனர்.போரினால் பாதிக்கப்பட்ட எம் தேச உறவுகளைக் வாழ வைக்க கனடா வாழ வைப்போம் மனித நேயப் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.இன்று கனடியத் தமிழ் வானொலியுடன் தொடர்பு கொண்ட நூற்றுக்கு மேற்பட்ட எமது தாயக உறவுகள்இ எம் உறவுகளை வாழவைக்க கனடா வாழ வைப்போம் அமைப்பின் கரங்களை இறுகப் பற்றிக் கொண்டமை மூலம்இ எம் தாயக உறவுகள் எவரும் அநாதைகள் அல்லர் என்பதை நிரூபித்துள்ளனர்.



Powered By: TNPF

பார்வை