8:38 AM | Posted by
Tamil National Peoples Front
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இத்தாக்குதலானது சிறீலங்கா படையினரின் ஆதரவும் பங்களிப்பும் இன்றி ஒருபோதும் இடம் பெற்றிருக்க முடியாது.என் தமிழ்தேசியமக்கள் முன்னணி கண்டனம் வெளியிட்டுள்ளது.கடந்த 16-10-2011 அன்று யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சுப்பிரமணியம் தவபாலசிங்கம் அவர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். இச்சம்பவமானது பலாலி வீதியும் பழம் வீதியும் இணையும் சந்தியில் உள்ள முக்கிய இராணுவக் காவலரணில் இருந்து சுமார் 50 மீற்றர் தூரத்திலேயே இடம் பெற்றது. மோட்டார் சைக்கிள்களில் வந்த சுமார் எட்டுப் பேர் கொண்ட குழுவினர் தவபாலசிங்கம் அவர்களை சுற்றிவளைத்து இரும்புக் குழாய்களால் தாக்கினர். தாக்குதல் காரணமாக தவபாலசிங்கத்தின் தலை மற்றும் உடலில் மோசமான காயங்கள் ஏற்பட்டது. தாக்குதலாளிகள் 'உனக்கு தனிநாடா வேண்டும்' என்று கத்தியவாறே தாக்கியுள்ளனர்.தவபாலசிங்கம் அவர்கள் கடந்த ஏப்பிரல் 2011 இல் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கான தலைவராக மாணவர்களால் தெரிவு செய்யப்பட்டிருந்தார். எனினும் அரசியல் அழுத்தங்கள் காரணமாக அவரது தெரிவு உத்தியோக பூர்வமாக ஏற்றுக் கொள்ளப்படாமல் இருந்தது. அந்த நிலையில் தவபாலசிங்கம் தலைமைப் பதவியை ஏற்கக் கூடாதென்றும் தானாக விலகிக்கொள்ள வேண்டும் என்றும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. ஆனாலும் மாணவர்களது கடுமையான அழுத்தங்கள் காரணமாக தவபாலசிங்கம் அவர்களது தெரிவு 2011 செப்ரெம்பரில் உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.தலைவராகப் பதவியேற்ற குறுகிய காலப்பகுதிக்குள்இ தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்டு வந்த அநீதிகளுக்கு எதிராக வன்முறையற்ற அமைதி வழிப்போராட்டங்களை முன்னெடுப்பதில் பல்கலைக்கழக மாணவர்கள் முக்கிய பங்கு வகித்தனர்.உதாரணமாக கிறீஸ்பூதம் என்ற பெயரில் தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவங்களுக்கு எதிரான எதிhப்புப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. அதனை விடவும் கடந்த உள்ளுராட்சித் தேர்தலில் சிறீலங்கா அரசுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்கக் கூடாது என்ற தீர்மானத்தை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மேற்கொண்டது.மேற்குறித்த செயற்பாடுகளுக்கு தவபாலசிங்கம் துணிச்சலுடன் தலைமை வகித்திருந்தார்.தவபலசிங்கத்தின் இவ்வகையான துணிச்சலான தலைமைத்துவமானது அவர் முகம் கொடுத்துள்ள இந்த தாக்குதலுக்குக் காரணம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்த கபடத்தனமான தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தத் தாக்குதல் என்பது வெறுமனே தவபாலசிங்கத்திற்கும் பல்கலைக்கழக சமூகத்திற்கும் எதிரானதல்ல அது ஒட்டுமொத்த தமிழ் தேசத்திற்கும் எதிரானதாகவே கருதப்படல் வேண்டும். ஏனெனில் தவபாலசிங்கம் தலைமை வகித்த செயற்பாடுகள் ஒட்டுமொத்த தமிழ் மக்களுடைய அடிப்படை இருப்புக்கு அவசியமானவையாகும்.இந்தத் தாக்குதல் சம்பவமானது நாகரீகம் அடைந்த ஓர் சமுதாயம் விரும்புகின்ற ஐனநாயக பண்புகளை கேலிக் கூத்தாக்குகின்ற வகையில் இடம் பெற்றுள்ளது. இச்சம்பவம் நடைபெற்ற பாணிஇ நேரம்இ இடம் என்பவற்றை நோக்கும் போது இத்தாக்குதலானது சிறீலங்கா இராணுவத்தின் ஆதரவும் பங்களிப்பும் இன்றி ஒருபோதும் இடம் பெற்றிருக்க முடியாது.
செ.கஜேந்திரன்
பொதுச் செயலாளர்
தமிழ் தேசியமக்கள் முன்னணி
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
November
(56)
- தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கூட்டமைப்பின் கட...
- போர்க்குற்றத்தோடு இனப்படுகொலையையும் அம்பலப்படுத்த ...
- சுயநிர்ணயமா? அதிகாரப்பகிர்வா? தமிழ் மக்கள் எதனைத் ...
- இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு சாத்தியமா? (ஆய்...
- இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின...
- வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம் !
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித ...
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் மைல்கல் கடந்த தாயகம்...
- திருமுறிகண்டியில் மீள்குடியேறியுள்ள மக்கள் உரிய ஆவ...
- வன்னியில் தொடரும் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்க...
- படைகாவலரண்கள் அகற்றப்பாடாமல் முகாம்மாலையில் மக்கள்...
- கிளி கரைச்சி பிரதேசத்தில் காணமல் போனர்கள் 2841 பேர் !
- செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சி...
- வடக்கில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை ...
- திருமுறிகண்டி பிரதேச மக்களை காட்டிற்குள் குடியேற்ற...
- தமிழர் தாயக பூமி வடக்கு கிழக்கு இல்லையாம்-தமிழீழ ம...
- முல்லைத்தீவில் தொடரும் நிலஅபகரிப்பு !
- இந்திய அரசால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் மிதிவண்டிக...
- தமிழ் தேசியத்தின் அடையாளம் தந்தை செல்வாவின் சிலை உ...
- தமிழீழ மக்களுக்கு என்ன நடக்கப்போகிறது ?
- தமிழ்மக்களின் தேசியஎழுச்சியை எந்த சக்தியாலும் மழுங...
- வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பை அமெரிக்க அழைத்தது எதற்காக?...
- வடக்கு கிழக்கு பிரச்சனைகள் தொடர்பில் ஹிலாரிகிளிண்ட...
- தமிழ் சிங்கள பாடசாலைகளை இணைத்து வெலிஓயா கல்விக்கோட...
- தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பன்னாடு...
- மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவை அமைப்பதற்கு இந்தி...
- யாழில் முச்சக்கரவண்டியினை இடித்துவிட்டு தப்பிசெல்ல...
- யாழ் பல்கலை. மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலை ...
- போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அ...
- வன்னி தொண்டர் ஆசிரியர்கள்நியமத்தில் புறக்கணிப்பு !
- ஊடகவியலாளர் நிமலராஜனின் 11வது நினைவு தினம் யாழில் ...
- மன்னார் கடலில் இரண்டாம் கட்ட எண்ணைஅகழ்வுஆராச்சியில...
- இந்தியப்படையினரால் யாழ்ப்பாணத்தில் படுகொலைசெய்யப்ப...
- மாணவன் தாக்கப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நடத்திய போராட்டத்தில்...
- முல்லைத்தீவில் மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயஉபகரணங...
- மாணவன் மீதானதாக்குதல் ஜனநாயகபண்புகளை கேலிக்கூத்தாக...
- வெலிஓயா சிங்களபிரதேசம் முல்லைமாவட்டத்துடன் இணைப்பு !
- தமிழ் மாணவர் சமூகம் மீதான காட்டுமிராண்டிதனமான தாக்...
- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட...
- தவபாலன் தாக்கப்பட்டதற்கு ஜக்கியராச்சியதமிழ்இளையோர்...
- யாழில் படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர...
- தமிழ்தேசியத்திற்கான குரலை அடக்கும் அரசின் தொடர்ச்ச...
- யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததலைவர் மீது தாக்கு...
- இலட்சியத்திலிருந்து திசைதிருப்ப புதிய பிரச்சினைகளை...
- வன்னியில் புனரமைப்புச் செய்யப்படாத 79 பாடசாலைகள் !
- வன்னியில்தொடங்கியுள்ள பருவமழையினால் மீள்குடியேற்றி...
- முறிகண்டி மக்கள் சொந்த இடங்களில்குடியேறமுடியாது !
- யாழில் வாக்களராக பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்யவேண...
- விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாத பாலியல் பல...
- ராஜீவ்காந்தி நிகழ்த்திய போர் குற்றங்களை எடுத்துகாட...
- அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றத...
- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சிங்களவர் உய...
- இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்ட...
- பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு வெற்றிகிடைத்துள்ளது !
-
▼
November
(56)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?