யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவன் தனபாலன் இனந்தெரியாத நபர்களால் தக்கப்பட்டமையை கண்டித்துயாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை கண்டண ஆர்ப்பாட்டப் பேரணியொன்றை நடத்தியுள்ளார்கள்.இன்று காலை 10.30மணியளவில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மண்டபத்தில் கூடிய மாணவர் கள் கண்டணக்கூட்டமொன்றை நடத்தினர், பின்னர் அனைத்து மாணவர் களும் ஒன்று கூடி மாணவன் மீதான தாக்குதலைக் கண்டிக்கும்வைகயில் பதாகைகளைத் தாங்கிய வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.யாழ் பல்பலைக் கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து. சுமார் 1மணிநேரம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தைத் தொடர்ந்து அங்கு பெருமெடுப்பில் படையினரும் கவல்துறை யினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுமாணவர்களை அச்சுறுத்தும் வகையில் படையினரின் செயற்பாடு காணப்பட்டுள்ளதுபடைபுனாய்வாளர்கள் கூடிமாணவர்களை புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் காட்டினர்.எனினும் எந்தவிதமான அச்சுறுத்தல் களுக்கும் அடிபணியாமல் மாணவர்கள் தொடர்ந்தும், வீதியில் ரயர்களைப்போட்டுக் கொளுத்தி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். மேலும் இன்றைய ஆர்ப்பாட்டத்தின் முடிவில் தமது சகமாணவன் மீதான தாக்குதலைக் கண்டித்து கண்டண அறிக்கையொன்றையும் மாணவர்கள் வெளியிட்டனர்.






Powered By: TNPF

பார்வை