கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விசாரணை வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளது. தம்மைப்போல த.தே.கூட்டமைப்பும் அந்த அறிக்கையை நிராகரிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவின் அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட முடியாததென்றும் அந்த அறிக்கை சா்வதேசத்தை ஏமாற்றும் கண்துடைப்பு நாடகம் என்றும் சுட்டிக்காட்டியுள்ள, தமிழ் தேசிய மக்கள் முன்னணி அந்த அறிக்கையை அடியோடு நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளது.கட்சியின் உபதலைவா்களில் ஒருவரும், வெளிவிவகார குழு இணைப்பாளருமான   கஜேந்திரகுமார்  பொன்னம்பலம் தலைமையில் 3 ஆம் குறுக்கு தெரு, யாழ்ப்பாணம் என்னும் முகவரியில் அமைந்துள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இன்று (19-12-2011) ஊடகவியலாளர் மாநாடு நடாத்தப்பட்டது. அம் மாநாட்டில் திருமதி பத்மினி சிதப்பரநாதன், பொதுச் செயலாளா் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனா். அங்கு மேலும் தெரிவிக்கப்பட்ட விடயங்கள் வருமாறு.


இவ்வாணைக்குழு அமைக்கப்பட்டமை பற்றிய அறிவிப்பு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னா் இலங்கை அரசாங்கத்தினால் வெளியிடப்பட்ட போது 24-10-2010 அன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணி இதே அலுவலகத்தில் நடாத்திய உடகவிலாளா் மகாநாட்டில் நல்லிணக்க ஆணை குழு நியமிப்பு நாடகம் சா்வதேசத்தை ஏமாற்றுவதற்கும், காலத்தை இழுத்தடிப்பதற்குமான கண்துடைப்பு நடவடிக்கை என்பதனை சுட்டிக்காட்டி தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதனை நிராகரிப்பதாக அறிவித்திருந்தது.கடந்த ஒருவருடத்திற்கு மேலாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி சுட்டிக்காட்டி வந்தது போன்று இறுதி யுத்தத்தில் நடந்தவற்றை மூடி மறைத்து முற்றாக புலிகளையும் தமிழ் தரப்புகளையும் குற்றஞ்சாட்டுவதாக கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்கழுவின் அறிக்கை வெளி வந்துள்ளது. இந்நிலையில் சர்வதேசம் இனியும் பொறுத்திராது பக்கசார்பற்ற சா்வதேச விசாரணை ஒன்றை நடத்த முன்வர வேண்டுமென வலியுறுத்தினா்.மேலும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவா்கள் கருத்து தெரிவிக்கையில் ஐநா நிபுணா் குழுவின் அறிக்கை வெளிவந்தபோது அதனை வரவேற்பது போன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் வரவேற்றனா். ஆனால் இன்றுவரை தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இனப்படுகொலை தொடா்பாக ஓா் சா்வதேச விசாரணை வேண்டுமென்ற கோரிக்கை கூட்டமைப்பினரால் வலியுறுத்தப்படவில்லை.இந்நிலையில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்கழுவின் அறிக்கை வெளிவந்துள்ளது. அந்த அறிக்கையினை தமிழ் தேசியக் கூட்டமைப்பும் முழுமையாக நிராகரிக்கவேண்டுமெனக் கேட்டுக்கொண்டதுடன், அவர்கள் கடந்த அறுபது வருடங்களாக இடம்பெற்ற இனப்படுகொலை தொடா்பாக சா்வதேச பக்கச்சார்பற்ற விசாரணையை வலியுறுத்த வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார். மேலும் இனியும் காலத்தை கடத்தாது கூட்டமைப்பினா் இவ்விடயத்தினில் விரைந்து தமது கட்சியின் பொது நிலைப்பாட்டினை வெளிப்படுத்த வேண்டுமெனவும் கேடடுக்கொண்டார்.சர்வதேசம் இனப்படுகொலை தொடர்பிலான விசாரணையை பொறுப்பேற்கவேண்டும். ஆனால் அது போர் நடந்த இறுதி மூன்று வருடங்களுக்கானதாக மட்டும் இருக்ககூடாது. ஆங்கிலேயா்கள் இலங்கையிலிருந்து விலகிய காலம் முதல் தமிழ் மக்கள் மீது சிறீலங்கா அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு நடவடிக்கைகள் தொடா்பாக முழுமையாக விசாரிக்கப்படவேண்டுமென அவர் மேலும் வலியுறுத்தினார்.இதே வேளை தமிழ் தேசியக்கூட்டமைப்பிடம் தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் முன்வைத்த பத்து அம்ச கோரிக்கைகள் வரவேற்கத்தக்கவையென தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆனால் கூட்டமைப்பினை திருத்தலாமென்ற தமிழ் சிவில் சமூக அமைப்புக்களது எண்ணம் ஒருபோதும் நிறைவேறாதெனவும், கூட்டமைப்பினா் தமிழ் மக்களின் நலன்களை கைவிட்டு பிற சக்திகளது நலன்களுக்காக செயற்பட்டு வருகின்றனா். இதனால் அவா்கள் ஒபோதும் திருந்தப்போவதில்லை என்றும் தெரிவித்தார்.சில வேளைகளில் அந்த எண்ணம் நிறைவேறினால் அதிகம் மகிழ்ச்சி அடைபவர்களாக நாங்களே இருப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.இதேவேளை தமிழ் சிவில் சமூக அமைப்புக்கள் பின்னணியில் தாங்களே இருப்பதாக கூட்டமைப்பை சேர்ந்த சிலர் கூறுகின்றனரே என எழுப்பப்ட்ட கேள்விக்கு பதிலளித்த அவர் கூட்டமைப்பினருக்கு நோக்கி சிவில் சமூகத்தினரால் சுட்டிக்காட்டப்பட்டுள்ள விடயங்களில் கவனம் செலுத்துவதைவிட்டு, நொண்டிச்சாட்டு தேடுவதே இப்போது அவா்களுக்கு பழக்கமாகிப் போய்விட்டதாக வும் கூறினார்.புத்திஜீவிகளையும் பொது அமைப்புக்களையும் சேர்ந்த  தமிழ் சிவில் சமூக அமைப்பு எமது கட்சியின் பின்னால் இருப்பதாக கூறுவது அவர்களது முயற்சியை கொச்சைப்படுத்துவதனை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. உண்மையில் அவர்கள் எம் பின்னால் இருந்தால் மட்டற்ற மகிழ்ச்சியடைவோம் எனவும் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் கூட்டமைப்புத் தலைவா் இறுதி யுத்தத்தில் உண்மையில் நடந்தது என்ன என்பது கண்டறியப்பட வேண்டும் என்று கூறிவருகின்றார். ஆனால் இறுதி யுத்தத்தில் நடைபெற்றது என்ன என்பது கூட்டமைப்பினருக்கு மிகவும் நன்றாகவே தெரியும். தெரிந்திருந்தும் இனப் படுகொலை தொடா்பான சா்வதேச விசாரணை ஒன்றை கோராது உண்மைகளை கண்டறிய வேண்டும் எனக் கோருவது இனப் படுகொலையில் ஈடுபட்டுவந்த சிறீலங்கா அரசாங்கத்தை காப்பாற்றி தமிழ் மக்களுக்கு கிடைக்க வேண்டிய நீதியை கிடைக்காமல் தடுத்து நிறுத்துவதுமே கூட்டமைப்பினரது நோக்கம் என்பதனை எமது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். உண்மை கண்டறியப்பட வேண்டும் என்ற அடிப்படையில் முயற்சிகள் இடம்பெற்றால் இறுதியில் படுகொலையில் ஈடுபட்டவா்கள் பாதிக்கப்பட்டவா்களிடம் மனம்வருந்துகின்றோம், மன்னித்துக் கொள்ளுங்கள் என்று கூறுவதுடன் விடயங்கள் முடிந்துவிடும். படுகொலை புரிந்த எவரும் தண்டிக்கப்பட போவதில்லை. அது மட்டுமன்றி இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இனத்திற்கு சா்வதேச சட்டங்களின் படி கிடைக்க வேண்டிய அரசியல் ரீதியாக நன்மைகளும் கிடைக்காமலே போய்விடும்.இவ்விடயத்தினை கருத்தில் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பினா் உண்மைகளை கண்டறிய வேண்டும் என்ற கதைகளை விட்டு இடப்பெற்ற இனப்படுகொலைகள் தொடா்பான சா்வதேச விசாரணையை வலியுறுத்த வேண்டும். இது விடயத்தில் தமிழ் மக்கள் மிகவும் வழிப்பாக இருக்க வேண்டும். என்றும் கேட்டுக் கொண்டார்.





Powered By: TNPF

பார்வை