8:55 AM | Posted by
Tamil National Peoples Front
தற்போது நடைபெற்று வரும் கூட்டமைப்பு - அரசு இடையிலான பேச்சுவார்த்தை சிறுபிள்ளைத் தனமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளருமான செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.தமிழர்களின் தனித் தேசியஇனம் என்ற நிலை அங்கீகரிக்கப்பட்டு மூன்றாம் தரப்பின் மத்தியஸ்தத்துடன் இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழர் தரப்பிற்கும் இடையில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளே தமிழர்களுக்கு கௌரவமான தீர்வைப் பெற்றுத்தரும் எனவும் தெரிவித்துள்ளார்.கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு பொறுப்புக் கூறவேண்டிய கட்சியாக சமகாலத்தில் இருந்து வருகின்றது என்பதை மறந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.ஒரு முறை பேச்சுக்களில் இருந்து விலகிக் கொள்வதாகவும் பின்னர் நிபந்தனைகளை கூறி அது நிறைவேற்றப்படுகிறதோ இல்லையோ மீண்டும் பேச்சுவார்த்தைகளில் இணைந்து கொள்வதுமாக நடந்து கொண்டிருக்கின்றது.இது இராஜதந்திர நடவடிக்கை என்றோ வேறு பெயர் கொண்டோ அழைக்க முடியாது. சிறுபிள்ளைத்தனமாக நடவடிக்கை என்றே கூறவேண்டும்.தமிழர்கள் தனித்தேசம் என்ற இறைமையை அங்கீகரிக்காமல் இழிவு படுத்தும் வகையில் அரசாங்கம் நடந்து கொண்டிருக்கின்றது. இதனை ஓப்புக் கொள்ளும் வகையிலேயே கூட்டமைப்பின் நடவடிக்கைகளும் அமைந்திருக்கின்றன. அதாவது தமிழர்கள் இழிந்த இனம் என்ற நிலைப்பாட்டிலேயே கூட்டமைப்பும் நடந்து கொண்டிருக்கின்றது.இந்த நிலையில்தான் சுயநிர்ணய உரிமையை கைவிட்டு அரசாங்கத்திடம் கையேந்தும் நிலையில்தான் கூட்டமைப்பு இருந்து கொண்டிருக்கின்றது.இவ்வாறு கூட்டமைப்பு பெறுகின்ற தீர்வென்வது தமிழர்கள் எதிர்பார்ப்பதைப்போன்று கௌரவமான தீர்வாக அமையாது என்பதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.அது இறுதியில் தமிழர்களுக்கு ஏமாற்றத்தையே வழங்கும் என்பதை நாம் தெரிவிக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.வெறுமனே கூட்டமைப்பின் செயற்பாடுகளை விமர்சித்துக் கொண்டிருக்கும் விமர்சகர்களாக நாம் இருந்து விடவில்லை. நாம் சொல்லுகின்ற விடயங்கள் எதிர்காலத்தில் நிதர்சனமாகும்,கூட்டமைப்பு இன்று தவறான பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு இந்தப் பேச்சுவார்த்தை மேடை சிறந்த எடுத்துக் காட்டாகும்.எனவே தமிழ்தேசம் அங்கீகரிக்கப்படாத நிலையில் நடைபெறும் பேச்சுக்கள் ஒருபோதும் தமிழருக்கான கௌரவமான தீர்வை பெற்றுத் தராது.இந்த விடயத்தில் இனியாவது கூட்டமைப்பு சுயநலத்தை விட்டுச் செயற்படவேண்டும் என்றார்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
December
(6)
- நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை வெறும் கண்துடைப்பு - த...
- சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் எம் முன்னுள்ள சவ...
- மாமனிதா் நடராஐா ரவிராஐ் அவா்கள் படுகொலை செய்யப்பட்...
- கனடா வாழவைப்போம் அமைப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக...
- கூட்டமைப்பு - அரசு இடையிலான பேச்சுவார்த்தை சிறுபிள...
- சர்வதேசத்தின் நலன்சார் போட்டியில் இலங்கைத் தீவின் ...
-
▼
December
(6)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?