5:21 AM | Posted by
Tamil National Peoples Front
தமிழர்களின் தாயகபூமி, தமிழர்களின் பூர்வீகம் என வடக்குக் கிழக்குப் பகுதிகளை நாம் சொல்லுவதுண்டு.முழுக்க முழுக்கத் தமிழ் மக்களுக்குரித்தான இந்தச் சொத்தைத் தற்போது எங்களுக்குச் சொந்தமில்லை எனக் கூறுகின்றார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் தலைவருமான இரா.சம்பந்தன்.இப் பகுதிகளை மீட்டெடுக்க தமிழ் மக்களால் தொடுக்கப்பட்ட போரில் எத்தனையோ இளைஞர், யுவதிகள் இப் பகுதிகளைச் சொந்தமாக்கத் தம் உயிர்களை ஆகுதி யாக்கியவர்கள்.இத்தனைகளையும் மறந்து கனடாவில் நின்று கதையளக்கும் சம்பந்தன், வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குச் சொந்தமில்லை என்று கூறிகின்றார்.இவ்வாறு வடக்குக் கிழக்குத் தமிழர்களுக்குச் சொந்தமில்லை எனத் தெரிவித்த சம்பந்தன், தாங்கள் கொள்கையில் இருந்து விலக மாட்டோம் என்றும் தனித்துவம் வாய்ந்த மக்கள் என்றும் தெரிவித்துள்ளார்.தமிழர் தாயகத்தையே கூறுபோட்டு விற்று விட்டுத் தற்போது தனித்துவம், கொள்ளை எனக் கதைவிடும் இவர், இவ்வாறு பேசுவதற்காக அரசாங்கம் இவருக்குக் கொடுத்திருக்கும் விலை என்னவென்று தெரியவில்லை.கலை, கலாசாரம், பண்பாடு உள்ளவர்களாம் தமிழ் மக்கள். ஆனால் இலங்கையில் வசிக்க முடியுமே தவிர வடக்குக் கிழக்கு எங்களுக்குச் சொந்தம் என்று உரிமை கொண்டாட முடியாது என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார் சம்பந்தன்.இது இவ்வாறிருக்க வடக்குக் கிழக்குப் பகுதிகளில் உள்ள மொழி, கலாசாரம் தொடர்பில் அதனைப் பாதுகாப்பதற்குத் தமக்கு அக்கறை உண்டு என்றும் தெரிவித்துள்ளார்.இந்த அக்கறை யாருக்குத்தான் இல்லை? தமிழனாகப் பிறந்த அனைவருக்கும் இருக்கும் அக்கறையைப் பற்றிப் பேசுகின்றார் ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்.தங்களது கடமை என்ன? அக்கறை என்ன என்பது தொடர்பில் அறியாத சம்பந்தன் எம்.பி., தமிழர் பிரதேசங்களில் மொழி, கலை, கலாசாரங்களைப் பேணிப் பாதுகாப்பது தங்களின் கடமை என்றல்லவா தெரிவித்திருக்க வேண்டும்? அதைவிடுத்து அனைவருக்கும் இருக்கும் அக்கறை பற்றி ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் பேசலாமா?தங்களின் பிரதிநிதியாகத் தமிழ் மக்களின் பிரச்சினை தொடர்பிலும், அவர்களின் நிரந்தர தீர்வு தொடர்பிலும் பேசுவதற்காகப் பாராளுமன்றம் அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இவர்கள்.எனவே எந்தக் காரணத்திற்காக அவர்கள் பாராளுமன்றம் சென்றார்களோ, அதை நிறைவேற்றி வைப்பது என்பது அவர்களின் கடமையாகவேயிருக்க வேண்டும்.அதைவிடுத்து எனக்கும் அக்கறையிருக்கு, வடக்குக் கிழக்கு எங்களுக்குச் சொந்தம் என்று நாங்கள் சொல்ல வரவில்லை எனப் பொறுப்பற்ற முறையில் பேசுவது, ஒரு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஆரோக்கியமானதாகவில்லை.அதிலும் இலங்கையில் மூன்றாவது எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமிழ் மக்களின் இன்றைய ஒரு சொத்து என இருக்கும் பட்சத்தில் அதன் தலைவரான நீங்கள் தவறுவதோ, தவறிழைப்பதோ எதிர்கால தமிழ் மக்களின் நிலைப்பாட்டுக்கு உகந்ததாக இருக்க முடியாது.எனவே நீங்கள் எதற்காகப் பாராளுமன்றம் சென்றீர்களோ, உங்களுக்கு தமிழ் மக்களால் வழங்கப்பட்ட பொறுப்பு எதுவோ அதனை நிறைவேற்றுவது உங்களின் கடமையாகும்.அதைவிடுத்து வடக்குக் கிழக்கு தமிழர்களுக்குச் சொந்தமில்லை என அனைத்துச் சிங்கள ஆட்சியாளர்கள் முதல், சிங்கள அரசியல் கட்சி வரை தெரிவிக்கும் அதே வசனத்தை நீங்களும் உச்சரித்தால் உங்களுக்கும் அவர்களுக்கு என்ன வித்தியாசம்?எனவே பொறுப்பற்ற முறையில் நடந்து கொள்வதைவிடுத்து ஒரு பொறுப்பு வாய்ந்த அரசியல் கட்சியின் தலைவர் என்ற வகையில் நீங்கள் நடந்து கொள்வது எதிர்கால தமிழ் மக்களின் அரசியல் செயற்பாடுகளுக்கு ஆரோக்கியமானதாக அமையும்.
அல்லது இவ்வாறு அடிபணிவு அரசியலை நடத்தவா தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து தமிழ் தேசிய ஆதரவாளர்களை அந்த கட்சியிலிருந்து நீக்கினீர்கள்?அமெரிக்கா சென்று அதன் தொடர்ச்சியாக கனடா நாட்டுக்கு சென்றிருந்த தமிழர் தேசியக்கூட்டமைப்பினர் அங்கு ஒரு கலந்துரையாடலை நடாத்தியதாகவும் அப்போது கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் வடகிழக்கு எமக்கு சொந்தமானதல்ல,என்று கருத்து தெரிவித்ததாக யூ ரியூப் இணையத்தளத்தில் காணொளியாக வெளிவந்து பலரையும் திகைக்க வத்திருக்கிறது.1970 களில் தொடங்கிய ஈழத்தின் வட கிழக்கு தாயக மண்மீட்பு உரிமைப்போராட்டம், மே 2009வரையான காலப்பகுதிவரை தொடர்ந்து, நாற்பது ஆயிரம் வரையிலான இளம் போராளிகளின் உயிர் கொடையுடன். பல இலட்சம் பொதுமக்களின் படுகொலை, பொருள் பண்டம் அனைத்தும் அழிக்கப்பட்டு வஞ்சகமாக தற்காலிகமாக தோற்கடிக்கப்பட்டது. இது சம்பந்தன் அவர்களும் அறிந்திருக்க முடியும்.வரலாறு தெரியாமல் ஈழப்போராட்டம் தொடங்கப்படவுமில்லை, இன்னொருவரின் மண்ணை தமிழினம் வலுக்கட்டாயமாக சுவீகரிக்க பல இலட்சம் உயிர்கள் காவு கொடுத்து கறைபட்டுக்கொள்ளவுமில்லை.பலதரப்பட்ட அகழ்வாராய்ச்சிகளும் ஆவணங்களும், மேலாக தமிழினம் அல்லாத வெளிநாட்டு வரலாற்று ஆசிரியர்களும் தமிழீழம் தொடர்பாக தக்க சான்றுகளுடன் வரலாற்று உண்மையை நிரூபித்து இருக்கின்றனர்.அத்துடனல்லாமல் பல நூற்றுக்கணக்கான புத்தகங்கள் தொன்மையான வரலாற்று ஆதாரங்களை காலக்குறிப்புடன் வரைபடங்களாகவும் திரிவுபடாமல் விளக்குகின்றன. பல சிங்கள வரலாற்று ஆய்வாளர்களும் இவற்றையே வழிமொழிகின்றனர்.ஈழத்தமிழர்களின் தாயக பூமியான, இலங்கையின் வடக்கு கிழக்கு தமிழீழ மண்ணின் சகல உரிமைகளையும் சிங்கள தலையீடு இல்லாமல் தமிழர்களால் நிர்ணயம் செய்யப்படவேண்டும், தமிழர்களின் பூர்வீக தாயகம் சுதந்திர தமிழீழமாக தமிழனால் கையாளப்படவேண்டும். என்பதே தந்தை செல்வநாயகம் முதலாக, தேசியத்தலைவர் வே பிரபாகரன் அவர்கள், வரையிலான தீர்க்கதரிசினமான தலைமைகளின் நீங்கா நினைவு.தமிழினத்தின் சகல அரசியல் – வாழ்வியல் சார்பான அனைத்து உரிமைகளையும். தீர்மானிக்கும் சக்தியாகவும் ஈழ விடுதலை+ அரசியல் ஆகியவற்றை கையாள உரிமைகொண்ட தகுதியானவர்களாயும். தந்தை செல்வநாயகம் அவர்களும், அதன்பின் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் அவர்களுமே, நம்பிக்கையானவர்களாக அனைத்து தமிழராலும் இன்றுவரை ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கின்றனர்.தந்தை செல்லா அவர்களின், பின் தேசியத்தலைவர் அவர்கள் மேற்கொண்ட தீர்மானங்கள்தான், தமிழீழத்திற்கான உறுதியான இறுதி தீர்வை நோக்கி அகில உலகத்தை நகர்த்தியிருக்கிறது.கலகம் பிறந்தால் அதன்பின் நியாயம் பிறக்கும் என்பதற்கொப்ப, கலகத்தின் பின் இப்போ நியாயத்திற்கான விவாத அரங்கில் தமிழினம் நின்றுகொண்டிருக்கிறது. பூமிப்பந்தில் இலங்கை எங்கிருக்கிறது என்று தெரியாமல் இருந்த காலம் மாறி, தமிழனின் போராட்ட எழுச்சி ஈழதேசம் பற்றி ஒவ்வொரு நாளும் உலகின் ஒவ்வொரு பகுதியிலும் விவாதிக்க வைத்திருக்கிறது. “முக்கியமானவர்கள்” கலந்துகொள்ள முடியாத விவாத அரங்கில்,, போராட்டத்தில் எந்த பங்களிப்பும் இல்லாதவர்கள் இராசதந்திரிகளாகவும், மந்திரிகளாகவும், பெருமை பெற்றிருக்கின்றனர். காரியம் நடந்தேறவேண்டும் அதுதான் தமிழினத்தின் தற்போதய பொறிநிலை. தாற்பரீகத்தை சரியாக உணர்ந்துகொண்டு எவர்கள் செயற்பட்டாலும் யாரும் இடையில் குறுக்கிட தேவையுமில்லை.மாறாக போராட்டத்திற்கு இழுக்குவரும்போது, தாய்மண்ணுக்கு அபகீர்த்தி ஒன்று வரும்போது, எவரும் பொறுத்துக்கொள்ள முடியாது, முக்கிய நேரங்களில் முன்நின்று முகம் கொடுத்தவனும், இழப்புக்களை அனுபவித்தவனும், உறவுகளை தொலைத்தவனும், பார்வையாளனாக மட்டும் இருக்க முடியாது, கருத்துச்சொல்ல அவனது உணர்வும் துடிக்கும் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள முடியும்.தமிழர் தலைவனால் ஈழத்தில் முன்னெடுக்கப்பட்ட உயிரிலும் மேலான போராட்டத்தின் தாக்கம், உள்ளூரில் எவரும் அறியப்படாமலிருந்த தேசியக்கூட்டமைப்பினரை இன்றைக்கு உலக அரங்கில் கலந்துரையாடும் அளவுக்கு பெருமைபெற்ற இராசதந்திர அந்தஸ்து வழங்கியிருக்கிறது.அவை தமிழினத்திற்கு பெருமை சேர்ப்பதாக இருந்தாலும், குறிப்பிட்ட பிரதிநிதிகள் பிரமாண்ட மண்டபங்களில் உள்ள இருக்கைகளில் அமரும் முன், வரலாற்றின் பின்னணியை சிரசில் இருத்தி சிந்தித்து ஒவ்வொரு வார்த்தையையும் பொறுப்புடன் பிரயோகிக்கும் கடப்பாடு உண்டு.அவை அனைத்தையும் மறந்து பண்டிகைகால குதூகலத்துடன், இரவு வழிப்போக்கர்களான பரதேசிகள், தரிக்கும் இடங்களில் முகம் தெரியாத இருளில் மடம் கட்டிக்கொள்ள பேசிக்கொள்வதுபோல, சம்பந்தன் அவர்கள் கனடா நாட்டில் ஈழ வரலாற்றை திரிவுபடுத்தி வெளியிட்ட கருத்து தமிழர்கள் மத்தியில் கொதிநிலைக்கு வழிதேடியிருக்கிறது. சம்பந்தப்பட்ட வாக்குமூலம் இன்ரர் நெற்மூலம் உலகம் முழுவதும் சென்றடைந்துவிட்டது.“வட கிழக்கு எமக்கு சொந்தமானது என்று நாங்கள் கூறவில்லை”. என்று கனடாவில் நிலைகொண்டிருக்கும் தமிழர் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்கள் தனது புத்திக்குட்பட புதிய கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டு ஈழத்தமிழினத்தை திகைக்க வைத்திருக்கிறார்.எந்த ஆதார அடிப்படையில் சம்பந்தன் இப்படி கூறினார் என்பது வேதனையையும், கூட கோபத்தையும் வெறுப்பையும் தமிழினத்திற்கு உண்டுபண்ணியிருக்கிறது. இது திரும்பப்பெறக்கூடிய ஒரு விடையமும் அல்ல. தாயகத்தில் இக்கருத்து வெளியிடப்பட்டிருந்தால் தமிழர் தேசியக்கூட்டமைப்பின் அரசியலுக்கு முடிவுரை எழுதியதாக அது அமைந்திருக்கும். ஆனால் கனடா மற்றும் மேற்குலகில் வாழும் இளம் சமுதாயத்தினர் மத்தியில் இக்கருத்தானது தாயக வரலாறு பற்றிய சந்தேகத்தை உண்டுபண்ணி ஒரு பிறழ்வை ஏற்படுத்தும் அபாயமும் தோற்றுவிக்கப்பட்டிருப்பது கவலையளிப்பதாகும்.“தீதும் நன்றும் பிறர்தர வாரா” ஏதோவிதத்தில் நாமே அனைத்திற்கும் காரணியாக இருக்கிறோம்.டக்கிளஸ் தேவானந்தா போன்றோர் கூட இப்படியான கருத்தை வெளிப்படையாக பேசியது கிடையாது.தமிழர் வரலாறு தெரியாமல்த்தான் சம்பந்தன் பேசினாரா, இல்லை தெரிந்துதான் விசமத்துக்கு பேசினாரா என்பது நிச்சியம் மக்கள் ஆராயாமல் விடப்போவதில்லை, ஈழ வரலாறு தெரிந்திருக்காவிட்டால் யாரிடமாவது விசாரித்து பேசியிருக்கவேண்டிய பொறுப்பு மூத்த அரசியல்வாதியான சம்பந்தனுக்கு உண்டு.மக்களின் உணர்வுகளுக்கமைய உண்மைநிலையை பிரதிபலிக்கவேண்டிய ஒரு இடத்தில் இருக்கும் மூத்தவரான சம்பந்தன் வரலாறு தெரியாமல் எழுந்தமானத்தில் யாரையோ திருப்திப்படுத்த வெளியிட்டிருக்கும் கருத்து மிகுந்த கவலைக்கும் “கண்டனத்துக்குரியதாகும்”
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
November
(56)
- தமிழரசுக் கட்சியினால் புனையப்பட்ட கூட்டமைப்பின் கட...
- போர்க்குற்றத்தோடு இனப்படுகொலையையும் அம்பலப்படுத்த ...
- சுயநிர்ணயமா? அதிகாரப்பகிர்வா? தமிழ் மக்கள் எதனைத் ...
- இனப்பிரச்சினைக்கு அதிகாரப் பகிர்வு சாத்தியமா? (ஆய்...
- இன்றைய சர்வதேச அரசியல் சூழ் நிலையில் தமிழ் மக்களின...
- வடக்கு-கிழக்கு பிரிப்புக்கு ஜனாதிபதிகளே காரணம் !
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித ...
- கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் மைல்கல் கடந்த தாயகம்...
- திருமுறிகண்டியில் மீள்குடியேறியுள்ள மக்கள் உரிய ஆவ...
- வன்னியில் தொடரும் மழையினால் மீள்குடியேறியுள்ள மக்க...
- படைகாவலரண்கள் அகற்றப்பாடாமல் முகாம்மாலையில் மக்கள்...
- கிளி கரைச்சி பிரதேசத்தில் காணமல் போனர்கள் 2841 பேர் !
- செஞ்சோலையில் வளர்ந்த 5பெண்பிள்ளைகள் வெலிக்கடைச் சி...
- வடக்கில் தென்னிலங்கை கடல்தொழிலாளர்களின் நடவடிக்கை ...
- திருமுறிகண்டி பிரதேச மக்களை காட்டிற்குள் குடியேற்ற...
- தமிழர் தாயக பூமி வடக்கு கிழக்கு இல்லையாம்-தமிழீழ ம...
- முல்லைத்தீவில் தொடரும் நிலஅபகரிப்பு !
- இந்திய அரசால் வழங்கப்படவுள்ள பத்தாயிரம் மிதிவண்டிக...
- தமிழ் தேசியத்தின் அடையாளம் தந்தை செல்வாவின் சிலை உ...
- தமிழீழ மக்களுக்கு என்ன நடக்கப்போகிறது ?
- தமிழ்மக்களின் தேசியஎழுச்சியை எந்த சக்தியாலும் மழுங...
- வன்னியில் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உலர்உணவ...
- தமிழ் தேசிய கூட்டமைப்பை அமெரிக்க அழைத்தது எதற்காக?...
- வடக்கு கிழக்கு பிரச்சனைகள் தொடர்பில் ஹிலாரிகிளிண்ட...
- தமிழ் சிங்கள பாடசாலைகளை இணைத்து வெலிஓயா கல்விக்கோட...
- தமிழ் மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பன்னாடு...
- மனித உரிமைகள் கண்காணிப்பு குழுவை அமைப்பதற்கு இந்தி...
- யாழில் முச்சக்கரவண்டியினை இடித்துவிட்டு தப்பிசெல்ல...
- யாழ் பல்கலை. மாணவர் ஒன்றிய தலைவர் மீதான தாக்குதலை ...
- போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அ...
- வன்னி தொண்டர் ஆசிரியர்கள்நியமத்தில் புறக்கணிப்பு !
- ஊடகவியலாளர் நிமலராஜனின் 11வது நினைவு தினம் யாழில் ...
- மன்னார் கடலில் இரண்டாம் கட்ட எண்ணைஅகழ்வுஆராச்சியில...
- இந்தியப்படையினரால் யாழ்ப்பாணத்தில் படுகொலைசெய்யப்ப...
- மாணவன் தாக்கப்பட்டதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப...
- தமிழ் தேசியக் கூட்டமைப்பினா் நடத்திய போராட்டத்தில்...
- முல்லைத்தீவில் மக்களுக்கு வழங்கப்பட்ட விவசாயஉபகரணங...
- மாணவன் மீதானதாக்குதல் ஜனநாயகபண்புகளை கேலிக்கூத்தாக...
- வெலிஓயா சிங்களபிரதேசம் முல்லைமாவட்டத்துடன் இணைப்பு !
- தமிழ் மாணவர் சமூகம் மீதான காட்டுமிராண்டிதனமான தாக்...
- யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் தாக்கப்பட...
- தவபாலன் தாக்கப்பட்டதற்கு ஜக்கியராச்சியதமிழ்இளையோர்...
- யாழில் படையினரின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் மாணவர...
- தமிழ்தேசியத்திற்கான குரலை அடக்கும் அரசின் தொடர்ச்ச...
- யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்ததலைவர் மீது தாக்கு...
- இலட்சியத்திலிருந்து திசைதிருப்ப புதிய பிரச்சினைகளை...
- வன்னியில் புனரமைப்புச் செய்யப்படாத 79 பாடசாலைகள் !
- வன்னியில்தொடங்கியுள்ள பருவமழையினால் மீள்குடியேற்றி...
- முறிகண்டி மக்கள் சொந்த இடங்களில்குடியேறமுடியாது !
- யாழில் வாக்களராக பதிவுசெய்யாதவர்கள் பதிவு செய்யவேண...
- விடுதலைப்புலிகள் கட்டுப்பாட்டில் இல்லாத பாலியல் பல...
- ராஜீவ்காந்தி நிகழ்த்திய போர் குற்றங்களை எடுத்துகாட...
- அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்தாயகத்தில் காலூன்றத...
- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலைக்கு சிங்களவர் உய...
- இந்தியாவையும் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்ட...
- பாலஸ்தீனத்தின் கோரிக்கைக்கு வெற்றிகிடைத்துள்ளது !
-
▼
November
(56)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?