தமிழ்மக்கள் வாழ்இடங்களில் சிங்களஅரசின் அமைச்சர்கள் தொடராக நில அபகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றார்கள் அந்தவகையில் ரிச்சாட்பதியுதீனின் வழிநடத்தலில் முல்லைத்தீவு சின்னாத்தாற்று பகுதியில் பாரியஅளவிலான நிலம் அபகரிக்கப்பட்டுள்ளது

அமைச்சர் றிசாட் பதியுதீனின் வழிநடத்தலில் அவரது பரிபாலங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தில் செய்யும்அடாவெடிகளை தடுப்பதில் காவல்துறையினரும் அரச அதிகாரிகளும் மௌனமாக இருப்பதாக அப் பகுதி மக்கள் கவலைவெளியிட்டுள்ளனர்.அமைச்சரின் ஆதரவாளர் என தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட ஒருவர் முல்லைத்தீவு சின்னாற்று பகுதியை வழிமறித்து பெருமளவான நிலப்பரப்பை அபகரித்து அதற்கு வேலியமைத்து காவலாளி ஒருவரையும்வைத்துள்ளார். சின்னாற்றில் உள்ள ஆற்றுப்படுக்கை மண்போட்டு மூடப்பட்டுகிறது.
பெரும்பாலான கிராமப் பகுதியில் தேங்குகின்ற வெள்ள நீர் சின்னாற்றினாலேயே ஓடிச்செல்கிறது. இதனால் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள சுமார் 15 கிராமங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்படும்அபாயநிலைக்கு ஆளாகியுள்ளார்கள். இந்த ஆற்றுப்படுக்கையில் மின்களை பிடித்து அதை தமது வாழ்வாதாரமாக கொண்டு வாழ்க்கை நடத்துபவர்களும் உள்ளனர்.அமைச்சரின் ஆதரவாளரை எதிர்த்த சில நபர்களுக்கு கொலைமிறட்டல் விடுக்கப்பட்டுள்ளது. தமதுசூழல் சமனிலையை குலைக்கும் இச்செயற்பாடு தொடர்பாக பல முறை பொலிஸாருக்கும் பிரதேச செயலகங்களுக்கும்முறைப்பாடு செய்யப்பட்ட போதும் இதுவரை காலமும் எந்நவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளார்கள்.தமிழர் தாயகத்தில் இவ்வாறு பல்வேறுபட்ட முறையில் சிறு சிறு பிரிவுகளாக நடைபெறும் நில அபகரிப்பு தொடர்ந்த வண்ணமேஉள்ளது.இதற்கு முழுபக்கபலமாக உள்ளவர்கள் அமைசர்களும் காவல்துறையினரும்க என்பது தெளிவாகியுள்ளதுமுல்லைத்தீவின் சின்னாற்று ஏரியில் சிறுமீன்,றால்,நண்டு போன்றனஉற்பத்தியாகிக்கொண்டிருக்கின்றது இவ்வாறு அமைச்சர் ஒருவரின்நில அபகரிப்பால் கடல்தொழில் செய்யும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

Powered By: TNPF

பார்வை