வடக்கு கிழக்கில் தமிழ்மக்கள் வாழ்இடங்களில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளும் நோக்கில் நீண்டகாலஅடிப்படையில் பலஅபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவுள்ளது.வடக்கில் 79 பாடசாலைகளை புனரமைப்பதற்கு இந்தியா உதவியளிக்கவுள்ளது. 160 மில்லியன் சிறீலங்கா ரூபா செலவில் இப்புனரமைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக இந்திய வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாதாய் இன்று தெரிவித்துள்ளார்.3 நாள் பயணம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார செயலளார் கொழும்பிலுள்ள இந்திய செய்தியாளர்களை சந்தித்தபோதே இத்தகவலை தெரிவித்தார். வவுனியா முல்லைத்தீவு கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களில் இந்த பாடசாலைகள் அமைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.அதேவேளை மன்னாரிலுள்ள திருக்கேதீஸ்வரம் கோவிலை புனரமைக்கும் பணியை இந்தியா ஏற்கவுள்ளதாகவும் சம்பூரிலுள்ள மற்றொரு பழைமையான ஆலயத்தை புனரமைப்பத்றகும் இந்தியா உதவும் எனவும் இந்திய வெளிவிவகார செயலாளர் ராஜன் மாதாய் தெரிவித்துள்ளார். இன்று காலை மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்த இந்திய வெளிவிவகார செயலாளர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு உட்பட பல விடயங்கள் குறித்து கலந்துரையாடினார். மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் உத்தேசிப்பதாக ராஜன் மாதாய் தெரிவித்தார்.இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கூறுகையில் அமைதியான சூழலொன்று நிலவுவதுடன் இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான வழிகள் குறித்து ஆராய வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.  இரு தரப்பையும் சேர்ந்த மீனவர்களுக்கிடையில் கிரமமான சந்திப்களை நடத்துவது இதில் ஒரு பகுதியாகும் எனவும் அவர் தெரிவித்தார்.இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் வீடமைப்புத் திட்டம் குறித்து கூறுகையில் இந்நடவடிக்கைகள் மெதுவாக இடம்பெறுவதாக அவர் ஒப்புககொண்டார். முதற்தொகுதி வீடுகள் எதிர்வரும் சில மாதங்களில் பயன்பெறுநர்களிடம் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Powered By: TNPF

பார்வை