மன்னார் கடலில் இரண்டாவது எண்ணெய் அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சிறீலங்கா அரசு தெரிவித்துள்ளது.இந்த மாதத்தின் முதல் வாரத்தில் இரண்டாம் வலயத்தில் இந்த பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இதேவேளை அண்மையில் இதே வலயத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது இயற்கை வாயு தளம் இருப்பது கண்டறியப்பட்டிருந்தது.அது தொடர்பான முழு விபரங்களைக் கொண்ட அறிக்கை விரைவில் கெயிரன் லங்கா நிறுவனத்தால் வெளியிடப்படும் என பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். வர்த்தக ரீதியாக இயற்கை வாயு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமாவென இந்த அறிக்கை மூலம் கண்டறியலாம். இந்த நிலையில் அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் 3வது அகழ்வையும் இந்த நிறுவனம் ஆரம்பிக்கும் என்றும்அதேவேளை மன்னார் குடா கடலில் எரிவாயு படிவங்கள் கண்டுபிடிக்கப் பட்டதனையடுத்து பல தரப்பினர் இலங்கைத்தீவில் அகழ்வு நடவடிக்கையினை மேற்கொள்ள ஆர்வம் காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் சிறீலங்கா அரசாங்கம் ஏற்கனவே ரஷ்யா மற்றும் வியட்நாம் அரசாங்கங்களுடன் எண்ணெய் அகழ்வு குறித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Powered By: TNPF

பார்வை