வெலிக்கடைச் சிறைச்சாலைப் பெண்கள் பிரிவில் இறுதியுத்தத்தில் சரணடைந்த பல பெண் கைதிகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.இச்சிறைச்சாலையில் 40வரையான தமிழ்ப்பெண் அரசியல் கைதிகள் துன்பங்களைச் சுமந்து வாழ்கிறார்கள். இவர்களில் கணிசமானவர்கள் முன்னாள் பெண்போராளிகள்.பெண்களுக்குரிய மாதவிடாய் காலங்களில் பாவித்தலுக்கான பொருட்கள் மற்றும் அவர்களுக்கான அடிப்படைத் தேவைகளான சவர்க்காரம் இ பற்பசை இ பற்தூரிகை முதல் எல்லாவற்றிற்கும் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.குறைந்தது ஒருவருக்கு ஒரு மாதம் ஆயிரம் ரூபா அவர்களுடைய அத்தியாவசிய தேவைகளுக்குத் தேவைப்படுகிறது.ஆயினும் 5ரூபாய்கூட இல்லாது அவலப்படுகிறார்கள்இவர்களில் பலருக்கு உறவினர்கள் சென்று பார்ப்பது கூட இல்லை. காரணம் உறவுகளை போரில் இழந்துவிட்டுத் தனியனாக சிறைவாசத்தை அனுபவிக்கிறார்கள். மிகுந்த சிரமங்களை எதிர்கொள்கிற இந்த தமிழ் அரசியல் கைதிகளை மறந்துவிட்டதா உலகத் தமிழினம் ? என வேதனையோடு தங்களுக்கான அடிப்படை உதவிகளை எதிர்பார்க்கிற பெண்கைதிகள் 6பேர் தமக்கான உதவியைச் செய்யுமாறு கடிதம் எழுதியுள்ளனர். இவர்கள் செஞ்சோலையில் வாழ்ந்து இன்று வெலிக்கடையில் இவர்களைச் சென்று பார்க்க உறவினர்களோ உதவிகளோ இல்லாமல் வேதனையோடு எழுதிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை