10:02 PM | Posted by
Tamil National Peoples Front
இலங்கையில் இறுதி யுத்தம் முடிவடைந்ததையடுத்து விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்திருந்த ஆயிரக்கணக்கானோர் அரச படையினரிடம் சரணடைந்தனர்.விடுதலைப்புலிகளுடன் இணைந்து செயற்பட்டவர்களும் மற்றவர்களும் என பெரும் எண்ணிக்கையானவர்கள் படையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.யுத்தம் முடிவடைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகிவிட்ட போதிலும், இவர்களில் பலருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படவோ அல்லது அவர்கள் விடுதலை செய்யப்படவோ இல்லையென்று தமிழ் அரசியல் கைதிகளின் உறவினர்களும், மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்களும் கூறுகின்றனர்.
சிறுநீரக பாதிப்புக்குள்ளான தமிழ் கைதி இராசரத்தினம் ஜெகதீஸ்வரன்...
இந்த நிலையில், கொழும்பு வெலிக்கடை மறியல் சிறைச்சாலையில் விசாரணைகளின்றி தடுத்து வைக்கப் பட்டிருந்த ஒருவர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டு உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கின்றார்.33 வயதான இராசரத்தினம் ஜெகதீஸ்வரன் என்ற இந்த தமிழ் அரசியல் கைதியின் விடுதலைக்கும், அவருக்கான வைத்தியத்திற்கும் உதவி புரியுமாறு அவரது குடும்பத்தினர் கோரியிருக்கின்றார்கள்.மன்னார் திருக்கேதீஸ் வரத்தைச் சேர்ந்த இவர் தேசிய வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவரது மனைவி ரனிதா ஜெகதீஸ்வரன் கூறினார்.இறுதி யுத்தத்தின்போது முள்ளியவளையில் இருந்து இடம்பெயர்ந்து முள்ளிவாய்க்காலுக்கு சென்றிருந்தபோது, துப்பாக்கிச் சூட்டுக்காயத்திற்கு இலக்காகியிருந்த இவர் கப்பல் மூலமாக புல்மோட்டைக்குச் சென்று திருகோணமலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் இவர், 2009 ஆம் ஆண்டு பிற்பகுதியில் படையினரால் கைது செய்யப்பட்டு பூஸா முகாமுக்குக் கெர்ணடு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து வெலிக்கடை சிறைக்கு மாற்றப்பட்டிருந்தார்.தனது கணவனுக்கு எதிராக இன்னும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படவோ வழக்குத் தாக்கல் செய்யப்படவோ இல்லை என்று அவரது மனைவி ரனிதா ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.முன்னர் விடுதலைப்புலிகள் அமைப்பில் இணைந்திருந்து முதுகில் காயமடைந்த பின்னர் அந்த அமைப்பில் இருந்து விலகிய தன்னை ஜெகதீஸ்வரன் திருமணம் செய்து வாழ்ந்து வந்ததாக ரனிதா கூறினார்.சிறுநீரகப் பாதிப்புக்கு உள்ளாகியுள்ள இவருக்கு சிறைக் கைதியாக இருக்கும் நிலையில் சிகிச்சையளிப்பதும், சிறுநீரக மாற்றம் செய்வதும் கடினமான காரியம் என வைத்தியர்கள் தெரிவித்திருப்பதாக கூறும் ரனிதா, யாரிடம் உதவி கேட்பது என்று தெரியவில்லை என்று தெரிவித்தார்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?