1:44 AM | Posted by
Tamil National Peoples Front
ஸ்ரீலங்கா அரசாங்கம் 2006 ஆம் ஆண்டு மனிதாபிமான இராணுவ நடவடிக்கை என்ற போர்வையில் சம்பூர் பிரதேசத்தின் மீது மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை யின் போது அப்பகுதி மக்கள் முழுமையாக இடம்பெயர்ந் தனர். ஆந்தப் பிரதேசத்தில் அனல் மின் நிலையம் அமைப்பதற்காக இந்தியாவுக்கு வழங்கப்போகின்றோம் என்பதனை சாட்டாகக் கூறி சம்பூர், கூனித்தீவு, சூடைக்குடா, இளக்கந்தை மற்றும் கடற்கரைச்சேனையின் ஒரு பகுதி உள்ளடங்கிய சுமார் பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவு உள்ள பிரதேசம் உயர்பாதுகாப்பு வலயமாக ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் பேணப்படுகின்றது. இப்பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு மூதூர் பிரதேச செயலக புள்ளிவிபரத் திரட்டின்படி 1940 குடும்பங்களைச் சேர்ந்த 7494 பேர் வாழ்ந்து வந்துள்ளனர். பத்தாயிரம் ஏக்கர் பரப்பளவுள்ள இப் பிரதேசத்தில் சுமார் 2500 ஏக்கர் நெல் வயலும், சுமார் 1000 ஏக்கர் குடியிருப்புப் பிரதேசமும் சுமார் 2000 ஏக்கர் மேட்டு நிலமும் சுமார் 4500 ஏக்கர் காட்டுப் பிரதேசமும் காணப்படுகின்றன.இப் பிரதேசத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் கல்வி கற்ற சம்பூர் மகாவித்தியாலயம் இன்று ஒரு கடற்படை முகாமாக உள்ளது. சம்பூர் சிறிமுருகன் வித்தியாலயம், கூனித்தீவு நாவலர் வித்தியாலயம், சூடைக்குடா பாரதி வித்தியாலயம் என்பன மூடப்பட்ட நிலையில் அழிவடைந்து கொண்டிருக்கின்றன. அப்பகுதி மாணவர்கள் பாடசாலைக் கல்வியின்றி வீதிகளில் அலைகின்றனர். சம்பூர் மக்களின் பாரம்பரிய வழிபாட்டுத் தலங்களான சிறிபத்திரகாளி அம்பாள் ஆலயம், சம்பூர் பிள்ளையார் ஆலயம், சம்பூர் அரசடி விநாயகர் ஆலயம், சம்பூர் நாகதம்பிரான் ஆலயம், கூனித்தீவு பிள்ளையார் ஆலயம், கூனித்தீவு வடபத்திர காளி ஆலயம், சூடைக்குடா மாரியம்மன் ஆலயம், மற்றும் இளக்கந்தை வைரவர் ஆலயம் என்பன கடந்த 6 வருடங்களாக மக்கள் வழிபாடு செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு, பூஇஐகள் எதுவுமின்றி சிதிலடைந்து கொண்டிருக்கின்றன.இந்நிலையில் கடந்த செவ்வாய்க் கிழமை 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக் கிடையே 500 மெகா வாட் மின்சாரத்தினை உற்பத்தி செய்யக்கூடிய அனல்மின்நிலையம் ஒன்றை சம்பூரில் அமைப்பதற்கான உடனப்படிக்கை இரு நாடுகளுக்கும் இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது. வெறும் 500 மெகா வாட் மின்சாரத்திற்காக பத்தாயிரம் ஏக்கர் காணி பறிமுதல் செய்யப்பட்டு சுமார் பத்தாயிரம் தமிழ் மக்கள் நடுத் தெருவில் விடப்பட்டு அவர்களது வாழ்வும் பலியிடப் பட்டுள்ளது. அனல் மின் நிலையத்திற் காக 500 ஏக்கர் ஒதுக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசு தொடர்ச்சியாகக் கூறி வருகின்றது. மிகுதி 9500 ஏக்கர் பற்றி எதுவித கதையும் இல்லை. அப்பகுதி மக்கள் குடிப்பதற்குக் கூட தண்ணியில்லத காட்டுப்புறத்திலுள்ள கருங்கற் பிரதேசங்களில் குடியேறுமாறு தொடர்ச்சியாக இராணுவத்தினர் வற்புறுத்தி வருவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.சனாதிபதித் தேர்தல் காலத்தில் சரத் பொன்சேகாவை ஆதரிக்குமாறும், பாராளுமன்றத் தேர்தலில் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறும் வாக்குக் கேட்டு சம்பூர் மக்கள் தங்கியிருந்த அடிப்படை வசதிகள் ஏதுமற்ற முகாமுக்குச் சென்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்தியாவுடன் கதைத்து சம்பூர் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக் குடியேற்றுவோம் என்று வாக்குறுதி அளித்ததாகவும்; ஆனால் இன்று வரை மக்களுக்கு எவ்வித தீர்வையும் பெற்றுத் தரவில்லை என்றும் பாதிக்கப்பட்ட சம்பூர் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.ஆனால் தேர்தல்கள் முடிவடைந்த பின்னர் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இந்திய அதிகாரிகளுடன் பேச்சுவார்தைகள் நடாத்திய சந்தற்பங்களில் சம்பூரில் அனல் மின்நிலையம் அமைக்கும் திட்டத்தினை தாங்கள் எதிர்க்க வில்லை என்றும் ஏனெனில் மின் நிலையம் அமைக்கப்படாவிட்டால் அப்பகுதியில் பாரிய இலங்கை இராணுவ முகாமை ஸ்ரீலங்கா அரசாங்கம் அமைத்துவிடும் என்பதால் தாம் அதனை எதிர்க்கவில்லை என்றும் கூட்டமைப்பினர் தம்மிடம் கூறியதாக சம்பூர் மக்கள் எம்மிடம் தெரிவித்தனர்.இப்படிக் கூறும் கூட்டமைப்பினர் சம்பூர் மாவித்தியால யத்தில் உள்ள கடற்படை முகாம் உள்ளிட்ட பாரிய படைத்தளங்களை அகற்ற வேண்டும் என்றும் அனல் மின்நிலையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள காணிகள் தவிரவும் மிகுதியான சுமார் 9500 ஏக்கர் நிலங்களில் பொது மக்களை மீளக் குடியேற்ற நடவடிக்கை எடுக்குமாறும் ஏன் கோரவில்லை. இந்திய மற்றும் சர்வதேச சமூகத்தின் அழுத்தத்தை அரசு மீது ஏற்படுத்தி சம்பூர் மக்களை குடியேற்ற உரிய நடவடிக்கைகளை ஏன் எடுக்கவில்லை. சிறீலங்கா அரசாங்கத்தை தாயா பண்ணுவதற்காக அப்பகுதியை சிங்களக் குடியேற்றங் களும், இராணுவக் குடியேற்றங்களும் அமைப்பதற்காக அரசுக்கு தாரை வார்த்துக் கொடுக்க கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதா? கூட்டமைப்பினரின் நடவடிக்கைகள் சம்பூர் பிரதேசத்தை நிரந்தரமாகவும், முழுமையாகவும் சிங்கள மயமாக்கும் ஸ்ரீலங்கா அரசின் திட்டத்திற்கு துணை புரிவதாகவே உள்ளது. இதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது.இந்தியாவும் சர்வதேச சமூகமும் ஸ்ரீலங்கா அரசு மீது உரிய அழுத்தங்களைப் பிரயோகித்து சம்பூர் மக்களுக்குச் சொந்தமான 9500 ஏக்கர் பிரதேசத்தினை அம் மக்கள் பயன்படுத்துவதற்கான சூழலை உருவாக்க உதவ வேண்டும் எனவும் வலியுறுத்துகின்றோம்.
இரா.ஹரிகரன்
அமைப்பாளர்,
திருகோணமலை மாவட்டம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
அமைப்பாளர்,
திருகோணமலை மாவட்டம்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
செ.கஜேந்திரன்
பொதுச்செயலார்,
தமிழ் தேசிய மக்கள் முன்னணி
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
September
(31)
- உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மகாநாட்டை புறக்கணித்த ...
- வெலிக்கடை சிறையில் விலங்குடன் இருக்கும் சிறுநீரக ப...
- வட-கிழக்கு மாற்றுத் திறனாளிகள் புனர்வாழ்வுக்கு மூன...
- புத்திஜீவிகள் யார் என்று தெரியாத கூட்டமைப்பு முக்க...
- இலங்கைப்படையின் போற்குற்றத்திற்கு ஆசான் இந்திய அமை...
- இன்று நடப்பதை அன்றே சொன்ன யோகி - இணைத்தலைமையின் நக...
- அன்பான எம் புலம்பெயர் தமிழீழ நெங்சங்களே, எம் உறவுக...
- எமது மக்களின் விடுதலைக்கு தமிழீழ இலட்சியத்திலிருந்...
- ஜெனீவாவில் திரண்டது தமிழர்படை! சித்தம் கலங்கியது ச...
- இறுதிக்கட்ட போரின்போது படையினரின் தாக்குதலால் பொது...
- யாழ். புன்னாலைக்கட்டுவன் பகுதியில். கடந்த 17.09.20...
- இன்னும் துயிலுதியோ பள்ளி எழ மாட்டீரோ !
- தமிழ் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் அரசியல் தல...
- முள்ளிக்குளம் மக்களை வேறு இடத்தில் குடியேற்ற முயற்...
- நெதர்லாந்து நீதிமன்றத்தில் கொலைக்களம் வீடியோவைப்...
- தமிழர்களுக்குத் தன்னாட்சி உரிமையைப் பெற்றுக்கொடு...
- தமிழீழத் தேசியத் தலைவரின் மாமியாரும், நாட்டுப்ப...
- பொங்கு தமிழ் போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்ன - ஊ...
- 17-09-2011 அன்று நடைபெற்ற தமிழ் தேசிய மக்கள் முன்ன...
- யூதர்களுக்கு டயஸ்போறா தமிழர்களுக்கு பொங்குதமிழ் – ...
- தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகவியலாளா் மகாநாடு...
- தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்ட போதுதான் விடு...
- யுத்தத்தின் பின்னரான நிலைமைகளை ஆராய்ந்து அதற்கேற்ப...
- தழிழ் அரசியல் கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்ட...
- 06.09.2011 அன்று இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே 500...
- கிரிஸ் பூதம் என்ற பெயரில் பெண்களுக்கெதிராக நடாத்தப...
- சுயநிர்ணய உரிமை என்பது கூட்டமைப்பின் வெற்றுக் கோஷம...
- வலிவடக்குப் பகுதியில் 40 சதவீதமான நிலப்பரப்பு இன்ன...
- புதுடில்லியில் இடம்பெற்ற சந்திப்பின் போது தயாரிக்க...
- வடக்குக் கிழக்கில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும்...
- தனித்துவமான தேசம், சுயநிர்ணய உரிமை அடிப்படையிலேயே ...
-
▼
September
(31)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?