உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 11வது சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரான்ஸ் சென்றிருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இறுதி நேரத்தில் அம் மகாநாட்டில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துவிட்டார்.இது குறித்த அவரது ஆதரவாளர்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வினாவியதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார், உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் 11வது சர்வதேச மகாநாடானது கே.பி. குழுவினரின் பின்னணியில் நடப்பதாக பலத்த சந்தேகம் உள்ளது.ஆகவேதான் இதில் கலந்து கொள்ளவிரும்பவில்லை என்றும் ஆனாலும் பிரான்ஸில் இடம்பெறவுள்ள தியாகி தீலிபனின் நினைவுதின கூட்டத்தில் தான் கலந்துகொள்ளவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.இதேவேளை உலகத்தமிழர் பண்பாட்டு இயக்கத்தின் சர்வதேச மகாநாட்டில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, ஸ்ரீதரன் ஆகியோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Powered By: TNPF

பார்வை