அதன்பின்னர் மறுநாள் காலையில் குறித்த குடும்பஸ்தர் வெட்டுக் காயங்களுடன் அப் பகுதியில் இருந்த வாழைத் தோட்டம் ஒன்றிலிருந்து  மீட்கப்பட்டு அச்சுவேலி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் ஈவினை கிழக்கைச் சேர்ந்த, தர்மலிங்கம் ஜெயந்திரன் என்ற 32 வயது குடும்பஸ்தரே மேற்படி வாள்வெட்டுக்கு இலக்காகி உயிரிழந்தவராவார்.யாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினைப் பகுதியில் கடந்த சனிக்கிழமை இரவு வீடொன்றில் புகுந்த இனந்தெரியாத நபர்கள் சிலரால் குடும்பஸ்தர் ஒருவர் அழைத்துச் செல்லப்பட்டார்.இவரது சடலம் தற்போது யாழ். போதனா மருத்துவமனையில் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது.

Powered By: TNPF

பார்வை