சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், முன்னாள் பிபிசி தமிழோசை தயாரிப்பாளருமான ஆனந்தி சூரியப்பிரகாசம் அவர்களின் கணவர் சிவசாமி சூரியபிரகாசம்  லண்டனில் காலமானார். உடல்நலம் குன்றிய நிலையில் தெற்கு லண்டன் சென்.ஜோன்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் 02.10.2011 நண்பகல் காலமானார்.லண்டன் நிலக்கீழ் தொடரூந்து நிறுவனத்தில் கணணித்துறையில் நீண்டகாலம் பணியாற்றி வந்த சூரியபிரகாசம் ஓய்வு பெற்றபின் பொதுப்பணியில் ஈடுபட்டு வந்தார்.சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்திற்கு நிதி உதவி உட்பட பல வழிகளில் அவர் உதவி புரிந்து வந்தார். அவரின் பிரிவால் துயருறும் அவரின் மனைவி மகள் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் ஆறுதல்களையும் தெரிவிப்பதோடு அன்னார் ஆத்ம சாந்திக்கு அனைவரும் பிரார்த்திப்போமாக.

Powered By: TNPF

பார்வை