9:39 PM | Posted by
Tamil National Peoples Front
நாடு மற்றுமொரு கட்ட உள்ளுராட்ச்சித் தேர்தலுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றது. எனினும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலே அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐக்கியதேசியக் கட்சியின் கோட்டையாகக் கருதப்படும் கொழும்பு மாநகர சபைக்கு நடைபெறப்போகும் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றி பெற்று கோட்டையில் கொடியேற்றுமா அல்லது கோட்டையைக் கோட்டை விடுமா என்பதே அனைவரதும் இன்றைய கேள்வியாக உள்ளது.இந்த இடத்தில் மனோகணேசன் அவர்கள் வகிக்கப் போகும் பாத்திரம்; ஒட்டு மொத்தத் தமிழ் மக்களுக்கும் மிகவும் முக்கியமானதாகும். தமிழ் மக்கள் இலங்கை முழுவதும் பரந்து வாழ்கின்ற போதும் வடகிழக்கு, மலையகம் மற்றும் கொழும்பு ஆகிய பிரதேசங்களிலேயே செறிந்து வாழ்கின்றனர். அண்மைய காலங்களில் இடம் பெற்ற அனைத்து தேர்தல்களிலும் வடகிழக்கு தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் மலையகத் தமிழ் மக்கள் மலைகத்தமிழ் கட்சிகளுக்கும் தமது வாக்குகளை கூடுதலாக அளித்து வெற்றி பெறச் செய்துள்ளனர். கடந்த பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் பேட்டியிட்ட பிரபா கணேசனுக்குக் கிடைத்த வாக்கு என்பது கொழும்புத் தமிழ் மக்கள் மனோகணேசன் அவர்களுக்கு அளித்த வாக்கேயொழிய அது பிரபா கணேசனுக்குரிய வாக்கல்ல என்பது அடுத்து வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலில் நிரூபிக்கப்படும்.
ஆகவே கொழும்பில் மனோ கணேசன் அவர்களின் பலம் என்பது அசைக்க முடியாததாக இருக்கின்ற போதிலும் அவரை ஏன் மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே இன்று தமிழ் மக்களின் முன்னாலுள்ள கேள்வியாகும். தலைநகரில் தமிழர்கள் வர்த்தகத்துறையில் மிகவும் பலம்பொருந்திய நிலையில் காணப்படுவதானது பலருக்கு தமிழர்களின் நிகழ்ச்சித்திட்டங்கள் மறைமுகமாக வடிவமைக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் எமது அரசியல் பலம் மூலமே நாம் அதனைத்தடுக்க முடியும். அதிகாரமற்ற மனோ கணேசனால் தமிழ் மக்களுக்கு எதிரான சதித்திட்டங்களை முறியடிக்க முடியாது.ஐ.நா சபையின் முன்னாள் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூயிஸ் ஆபர் அம்மையார் அவர்கள் இலங்கைக்கு வருகை தந்தபோது காணாமல் போனார்கள் பற்றிய பிரச்சினைகளை உலகறியச் செய்வதற்கு ஐநா அலுவலகத்திற்கு முன்னால் மனோ கணேசன் அவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்ட ஆர்பாட்டமானது வயிற்றெரிச்சலை வர்த்தகப்பலத்தினையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றது.
வாக்குப்பலத்தினையும் தலைநகரில் சிதறடிப்பதற்கு வாழும் பலமான பெரும் வெற்றியினை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தது. தாமே தழிழ் மக்களின் பிரதிநிதிகள் என்று மார்தட்டும் பல அரசியல் வாதிகள் வடகிழக்கிலேயே ஒரு சிறு மக்கள் போராட்டத்தினை நடத்தமுடியாத வங்குரோத்து நிலையில் இருக்கும் போது தலைநகரில் துணிச்சலுடன் போராடும் தலைவனாகிய மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? வாக்களிக்கக் கூடாதா? வாக்களிக்காவிட்டால் பாதிக்கப்படப்போவது யார்? விடை பாதிக்கப்படப்போகும் தமிழ் மக்கள் மனோ கணேசன் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்பதாகும். 02.10.2011 வெளியாகிய சன்டே ரைம்ஸ் பத்திரிரிகையில் தமது ஆதரவாளர்கள் தாம் விரும்பியவாறு வாக்களிக்கலாம் என தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் கூறியதாக செய்தி வெளியாகியுள்ளளது. இவ்வாறு கூறுவதற்கு சம்மந்தன் அவர்களுக்கு உரிமை உள்ளதெனினும் வரலாற்றினை சற்றுத் திரும்பிப் பார்த்தல் மிகவும் அவசியமானதாகும். தமிழ் மக்களுக்காகப் போராடும், தமிழ் மக்களின் மிகுந்த அபிமானத்தினை பெற்றுள்ள கடந்த உள்ளுராட்ச்சித் தேர்தலில் தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்காக வடகிழக்கில் துணிச்சலுடன் பிரச்சாரம் செய்த மனோ கணேசன் அவர்களுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் எனக்கேட்பதில் சங்கடங்களை எதிர் நோக்கும் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் அவர்கள் எந்த தார்மீகம் மற்றும் மனச்சாட்சியின் அடிப்படையில் கடந்த ஜனாதிப்பதித் தேர்தலில் யுத்தத்தினை வழிநடத்தி தமிழ் மக்களுக்கு மிகப்பெரும் அழிவினை ஏற்படுத்திய முன்னாள் இராணுவத் தளபதியாகிய சரத் பொன்சேகா அவர்களுக்கு தமிழ் மக்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் மட்டுமல்லாது நேரடியாவும் சென்று வாக்குக் கேட்டார்? தமிழ் மக்களுக்கு எப்போது என்ன ஆற்றல் இல்லாத போதும் மனிதாபிமானம் நன்றியுணர்வு என்பனவும் இவர்களிடம் கிடையாதா?உண்மையில் சம்மந்தன் அவாக்ள் யாருடைய கைப்பொம்மையாக இருக்கின்றார் என்பதனை இன்றுதமிழ் மக்கள் சரிவரப் புரிந்து கொண்டுள்ளமையினால் சம்மந்தன் அவர்களின் சொல்லைக் கேட்டு வாக்களிக்கும் நிலையில் குறிப்பாக கொழும்பு வாழ் தமிழ் மக்கள் இல்லை என்பதை நடைபெறப் போகும் கொழும்பு மாநகர சபைத் தேர்தலில் மனோ கணேசன் அவர்கள் பெறப்போகும் வெற்றி குறிப்பாக சம்மந்தன் அவர்களுக்கும் பொதுவாக அவரோடு சேர்ந்து துதிபாடும் சில தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் நிரூபித்துக் காட்டும்.ஏனெனில் தமிழ் மக்களுக்கு யாரும் அரசியல் சொல்லித்தரத் தேவையில்லை. தலைவர்கள்என்று சொல்லப்படுவோர்களுக்கு தமிழ் மக்கள் கடந்த காலங்களில் இடம் பெற்ற அனைத்துத் வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள முடியாத தேர்தல்களிலும் நன்றாகப் பாடம் புகட்டியுள்ளார்கள்.இன்னொரு நெருடலான விடயத்தினையும் இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமானதாகும். இலங்கை அரசியலானது நாடு சுதந்திரம் அடைந்த காலத்திலிருந்தே இனத்துவம் சாhந்ததாகவே உள்ளது. இதற்கு பதவிறேற அனைத்து அரசாங்கங்களினாலும் அமுல்படுத்தப்பட்ட சட்டங்களும் திட்டங்களுமே காரணமாகும். இலங்கையில் முஸ்லிம் மக்கள்; முஸ்லிம் வேட்பாளர்களுக்கும் சிங்கள மக்கள் சிங்கள வேட்பாளர்களுக்கும் தமது வாக்குகளை அளித்து தமது இனத்தவர்களை தெரிவு செய்கையில் தமிழ்மக்களில் ஒரு சாரார் மட்டும் தமது வாக்குகளை இனரீதியாக அல்லாமல் எல்லோருக்கும் பிரித்துஅளிக்கின்றனர்.இதனால் தமிழ் பிரநிதித்துவம் வீழ்ச்சியடைவதுடன் வெற்றி பெறும் மற்றைய இனத்தோர் அதன் பின் தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி வாய்திறப்பதில்லை. கலாநிதி விக்கிரமாபாகு அவர்களின் அரசியில் இதற்கு வதிவிலக்காதாகும். ஆவர் தமிழ் மக்களின் பிரச்சினைகளை நியாயப்படுத்துகின்றார். சிங்கள மக்களுக்கு எதிராக அவர் ஒரு போதும் பேசியது கிடையாது ஆனால் அவர் எவ்வளவு தூரம் சிங்கள மக்களிள் வாக்குகளைப் பெற்றார் என்பது கேள்விக்குரியதாகும். ஆகவே அவருக்கு ஆதரவளிக்க வேண்டியது தமிழ் மக்களின் கடமையாகும்.பிரபா பாராளுமன்றத்திற்குத் தெரிவாகி ஆளுந்தரப்புக்குத் தாவிய பின்னர் சில தமிழ் மக்கள்மனக்கசப்பு அடைந்துள்ளமை தெளிவாகப் புரிகின்றது. ஆனால் தமிழ் மக்கள் மனோ கணேசன் மீது மனக்கசப்பு அடைந்து தேர்தலில் அவர்களுக்கு ஆதரவு அளிக்காவிட்டால் நமது இனத்தின் அரசியல் பயணம் மேலும் இடர்களைச் சந்திக்க வேண்டி வரும்.மனோ கணேசன் அவர்கள் தன்னுடன் சேர்த்து ஊடகவியலாளர் தியாகராஜா நிரோ, உள்ளிட்ட ஆற்றல் வாய்ந்த பல இளைஞர்களையும் தமிழ் மக்கள் பால் பற்றுக் கொண்ட சேவை செய்யக்கூடிய ஒரு செயலணியினையும் களமிறக்கியுள்ளார். 1977 ஆம் நடைபெற்ற பொதுத் தேர்தலில் தமிழ் பிரதேசத்தில் தேர்தல் தாரக மந்திரமாகப் பாவிக்கப்பட்ட வசனம்; “ஆண்டது நீலக்கட்சி ஆளப்போவது பச்சைக்கட்சி இன்றும் கூட நாம் மனோகணேசன் அவர்களின் கரத்தினைப் பலப்படுத்தினால் மட்டுமே ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக இருந்து தமிழ் மக்களுக்கு மிகப்பெரும்பலமாக விளங்குவார். ஏனெனில் அவர் சம்மந்தன் மற்றும் தமிழ்தேசியச்கூட்டமைப்பின் ஏனைய சில தலைவர்கள் கணேசன் மனோ கணேசன் அவர்களின் வாக்குகளைப் பெற்று இரண்டும் சேர்ந்து தமிழனுக்கு நெருப்புக்குச்சி” என்பதாகும்.நீலக்கட்சியும் பச்சைக்கட்சியும் தமிழருக்கு நெருப்புக்குச்சிதான். எனவே போன்று இந்தியாவின் கிடுக்குப் பிடிக்குள் இருக்கவில்லை. தான் நினைத்ததைச் செய்யும் சுதந்திரத்துடன் அவர் இருக்கின்றார்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
October
(21)
- வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப்பதியலாம் !
- இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெக...
- ஆணி வேரறுத்து ஊர் உறவு பறித்து என் தாய்த் தேசத்தை ...
- கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தாம் தமிழ்த் தேசியத...
- ஓங்கி ஒலிக்கும் ஊருக்கு உபதேசம் !!!
- மனோகணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வே...
- கானகாம்பிகை குளம் சாந்தபுரம் பகுதி காணிகளை உள்ளடக்...
- தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை- குற்றம் சாட...
- யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ...
- சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தரு...
- யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொ...
- மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்ப...
- யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் ...
- சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், ம...
- ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்...
- தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது ...
- புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி...
- தமிழீழ தேசத்தின் உரிமைக் குரல் !
- விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் !
- போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவிடம் இருந்தது !
- இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள் த...
-
▼
October
(21)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?