9:03 PM | Posted by
Tamil National Peoples Front
யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் இருந்து அடித்துக் கொல்லப்பட்ட நிலையில் வயோதிபர் ஒருவரின் சடலத்தை பிரதேச மக்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் கோப்பாய் பொலிஸார் இன்று காலை மீட்டுள்ளனர்.குறித்த முதியவர் திருநெல்வேலி பகுதியில் செருப்புத் தைக்கும் தொழிலை மேற்கொள்வதாகவும், கோண்டாவில் வடக்கு தில்லையம்பதியைச் சேர்ந்த கணபதி வேலுப்பிள்ளை (வயது70) ஆறு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இவர் நேற்றைய தினம் தொழிலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுள்ளார். எனினும் மாலை வீடு திரும்பவில்லை. அது குறித்து வீட்டில் இருந்தவர்களும் அசட்டை செய்யாத நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.இதேவேளை குறித்த முதியவரை நேற்று மாலை 2மணி மற்றும் 5மணி ஆகிய நேரங்களில் சம்பவம் நடைபெற்ற இடத்தில் மேலும் இரண்டு நபர்களுடன் இருந்ததை அப்பகுதியில் உள்ள சிலர் கண்டுள்ளனர்.சடலம் ஒன்று காணப்படுவதாக 119 என்ற அவசர தொடர்பு எண்ணுக்கு தெரியப்படுத்தப் பட்டதை அடுத்து கொழும்பி லிருந்து கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு கோப்பாய் பொலிஸார் சம்பவஇடத்துக்கு விரைந்தனர்.யாழ். நீதிமன்ற மேலதிக நீதிவான் அ.பிறேம்சங்கர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை நடத்தியதுடன் உடற் கூற்றுப் பரிசோதனைகளுக்காக சடலத்தை யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப் படைக்குமாறு உத்தரவிட்டார்.சடலம் மீட்கப்பட்ட இடத்தின் அருகில் பயன்படுத்தப்பட்ட மதுப்போத்தல்கள் இரண்டு, குறைபீடி சடலத்தில் காயங்கள் சிலவும், மதிலில் இரத்தமும் காணப்படுகிறது.என்பன காணப்பட்டன எனப் பொலிஸார் கூறினர். சுருட்டுடன் சைக்கிளும் அங்கிருந்து மீட்கப்பட்டன.உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின்படி கழுத்து நெரிக்கப்பட்டதால் வேலுப்பிள்ளையின் இறப்பு நிகழ்ந்துள்ளது. கையில் அணிந்திருந்த மோதிரங்கள் கழற்றப்பட்டதற்கான அடையாளங்களும், உடலில் பரவலான சிறுகீறல் காயங்களும் காணப்படுவதாக அறிக்கை கூறுகிறது.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
October
(21)
- வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப்பதியலாம் !
- இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெக...
- ஆணி வேரறுத்து ஊர் உறவு பறித்து என் தாய்த் தேசத்தை ...
- கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தாம் தமிழ்த் தேசியத...
- ஓங்கி ஒலிக்கும் ஊருக்கு உபதேசம் !!!
- மனோகணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வே...
- கானகாம்பிகை குளம் சாந்தபுரம் பகுதி காணிகளை உள்ளடக்...
- தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை- குற்றம் சாட...
- யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ...
- சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தரு...
- யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொ...
- மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்ப...
- யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் ...
- சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், ம...
- ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்...
- தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது ...
- புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி...
- தமிழீழ தேசத்தின் உரிமைக் குரல் !
- விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் !
- போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவிடம் இருந்தது !
- இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள் த...
-
▼
October
(21)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?