9:51 AM | Posted by
Tamil National Peoples Front
போரின் நேரடி அனர்த்தங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் நாம், அதன் மறைமுகமான விளைவுகளையும் அனுபவிக்கத் தொடங்கி விட்டோம். எங்கள் கூட்டுக் குடும்பக் கலாசார உறவு முதல் புலம்பெயர் உறவுகளின் பிரிவுவரை எல்லாமும் ஏதோவொரு வகையில் எங்கள் வாழ்வில் சோகத்தை தருவனவாகவே அமைந்துள்ளன. வெளிநாடுகளில் வாழும் எங்களவர்களின் உறவு நிலை என்பது நீடிக்கும் என்று எண்ணுகையில், காணிப் பதிவு என்ற புதிய திட்டம் வெளிநாட்டில் வாழும் எம் உறவுகளின் தொடர்பை வேரறுத்துவிட்டது.ஆம், காணி உரிமையை வலுவடையச் செய்தல் என்ற வகையில் காணிப்பதிவு இடம்பெறும் அதேநேரம், இப்பதிவு மூலம் வெளிநாட்டவர்களின் காணிகளை அரசு சுவீகரிக்கவுள்ளது என்ற தகவலால் வெளிநாடுகளில் வாழும் நம்மவர்கள் தங்கள் பெயரிலுள்ள காணிகளை வேகமாக விற்பனை செய்கின்றனர். எனது வீடு, எனது காணி யாழ்ப்பாணத்தில் இருக்கின்றது. நான் என் தாய்மண்ணுக்குப் போய்வருகிறேன். எனது யாழ்ப்பாணத்து வீட்டில் உறங்கினாலே எல்லாக் கவலையும்போம் என்ற நினைப்போடு வாழ்ந்த எங்கள் உறவுகளை வேரறுத்து; ஊர் உறவு பறித்து ;தாய்த் தேசத்திற்கு வராதே என்று தடுப்பதாகக் காணிப் பதிவு அமைந்துவிட்டது.சொந்த வீட்டை, பெருமையாய்ப் பேசிய தன் காணியை விற்ற பின் தாய் மண்ணுக்குப் போக வேண்டும் என்ற நினைப்பு வெறுப்புக்குரியதாகவே இருக்கும். எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவிய யாழ்ப்பாண மண்ணின் பெருமையை லண்டனில், கனடாவில், சுவிஸில் பிறந்த என் பிள்ளைக்கு எப்படிச் சொல்வது என்று ஏங்கிக் கொண்டிருக்கும் நேரத்தில், அதோ உன் அப்பாவின் வீடு, உன் அம்மாவின் காணி என்று,ள நாம் பிறந்த தாய் மண்- தமிழ் மண் எனச் சுட்டிக்காட்டி சுணை ஏற்றலாம் என்றால், அதற்கும் விடுவாரில்லை. ஓ! என் தமிழ்த் தேசமே! உன்னில் இருந்து என் ஆணி வேரை அறுத்து ஊர் உறவைப் பறிக்கிறார்; என் செய்வோம்!என் அப்பாவின் ஊர் யாழ்ப்பாணமாம் என்று என் பிள்ளை சொல்லுமேயன்றி, நல்லூர்க் கந்தனின் திருவிழா பார்க்கப் போகிறோம் என்றா சொல்லும்? முருகா! உன்னைத் தொலைக்காட்சியில் பார்த்து அரோகரா என்பேன்.என் பிள்ளை அதனை ஒருவிதமாகப் பார்க்கும். எல்லாம் விற்றாகிவிட்டது. என் தமிழ் உணர்வைத் தவிர. இதுவே எங்கள் புலம்பெயர் உறவுகளின் தற்போதைய மனநிலை.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
October
(21)
- வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப்பதியலாம் !
- இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெக...
- ஆணி வேரறுத்து ஊர் உறவு பறித்து என் தாய்த் தேசத்தை ...
- கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தாம் தமிழ்த் தேசியத...
- ஓங்கி ஒலிக்கும் ஊருக்கு உபதேசம் !!!
- மனோகணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வே...
- கானகாம்பிகை குளம் சாந்தபுரம் பகுதி காணிகளை உள்ளடக்...
- தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை- குற்றம் சாட...
- யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ...
- சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தரு...
- யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொ...
- மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்ப...
- யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் ...
- சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், ம...
- ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்...
- தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது ...
- புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி...
- தமிழீழ தேசத்தின் உரிமைக் குரல் !
- விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் !
- போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவிடம் இருந்தது !
- இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள் த...
-
▼
October
(21)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?