தமிழ்த் தேசியத்தினை வலுப்படுத்துவதற்காகவும் இன ஒருமைப்பாட்டை பேணுவதற்காகவும் செயற்படுகின்ற கட்சி மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியாகும். இக்கட்சிக்கு கூட்டாக வாக்களிப்பதன் மூலம் மட்டுமே கொழும்புத் தமிழ் மக்கள் தங்களது அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்த முடியும். மனோ கணேசன், விக்கிரமபாகு கருணாரட்ணஆகியோர் தமிழ்த் தேசம் தனித்துவமான இறைமை கொண்டது என்பதையும் தமிழ் மக்களுக்கு சுயநிர்ண உரிமை உண்டு என்பதனையும் வெளிப்படையாக ஆதரிக்கும் துணிச்சலான அரசியல் தலைவர்கள். இவர்கள் இருவரும் எந்தவொரு பேரினவாதக் கட்சிகளின் செல்வாக்கிற்கும் உட்படாத நேர்மையான தலைவர்கள். இவர்களுடைய ஆழமான தர்க்கரீதியான, துணிச்சலான கருத்துக்களும் அவை தொடர்பான செயற்பாடுகளும் தமிழ்த் தேசிய அரசியலை வலுப்படுத்துவதற்கு அதிகளவில் உதவியிருக்கின்றன. ஆபத்துக்கள் தம்மை நோக்கி வந்த காலத்திலும் துணிச்சல்களை வெளிக்காட்ட அவர்கள் தயங்கியதில்லை. துணிச்சலான இந்த அரசியல் தலைவர்களையும் அவர்களது கட்சியையும் பலப்படுத்த வேண்டியது எம் எல்லோரினதும் கடமையாகும். கொழும்பு மாநகர சபை எல்லைக்குள் இரண்டு இலட்சம் வரையான தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஒருங்கிணைந்து வாக்களிப்பார்களேயானால் அது வழங்கும் செய்தி தமிழ்த் தேசிய அரசியலுக்கு ஒரு புதிய பரிமாணத்தைக் கொடுக்கும் என்பதைக் கொழும்புத் தமிழ் மக்கள் மறக்கக்கூடாது. ஏனெனில் இத் தேர்தலை வெறும் மாநகரசபைத் தேர்தலாக சர்வதேச சமூகம் பார்க்கவில்லை. மாறாகத் தமிழ்த் தேசியத்தோடு கொழும்புத் தமிழ் மக்கள் இருக்கின்றார்களா? என்பதை அளவிடும் ஒரு கருத்துக்கணிப்பாகவே நோக்குவார்கள்.இத்தேர்தலில் கொழும்பு வாழ் தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஓரணியில் நின்று மனோ கணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணியின் ஏணிச் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் தமிழ் மக்களது ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு வெளிப்படுத்துவதன் மூலம் தமிழ்த் தேசத்தின் பேரம்பேசும் சக்தி யை வலுப்படுத்த வேண்டும் எனக் கோருகின்றோம் என்றுள்ளது.

Powered By: TNPF

பார்வை