9:23 PM | Posted by
Tamil National Peoples Front
தமிழனின் பழமையைப்பேசி அரசியல் நடத்துபவர்கள் அதனைப் பேணிப் பாதுகாப்பதற்கு முன்வருவதில்லை என்று யாழ். பல்கலைக்கழக வரலாற்றுத்துறைத் தலைவர் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் குற்றம் சாட்டியுள்ளார்.புராதன பண்பாட்டுச் சின்னங்களையும் அவை அமைந்துள்ள இடங்களையும் பாதுகாப்பது தொடர்பான கலந்துரையாடல் நேற்று யாழ். நகரில் இடம்பெற்றது. நீராவியடியில் உள்ள சைவபரிபாலன சபை மண்டபத்தில், தமிழர் பண்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் வடக்கின் புத்திஜீவிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாணத்தின் புராதன சின்னங்களாக 22 இடங்களைத் தொல்பொருள் திணைக்களம் பிரகடனப்படுத்தி உள்ளது. அவற்றைப் புனரமைப்பதற்கு நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் இந்த வருடம் ஆரம்பிக்கப்படும். எங்கள் வரலாற்றுப் பெருமையைக் காக்க வேண்டும் என்பதில் அரசியல்வாதிகளுக்கு அக்கறையில்லை. எங்களுடைய பிள்ளைகள் படிக்கும் வரலாற்றுப் புத்தகத்தில் எங்களுடைய வரலாறு இல்லை. எமது மக்களின் பழமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் புஷ்பரத்தினம் தெரிவித்தார்.நாம் எமது பழமை மற்றும் பண்பாட்டை இழந்தால் மீள உருவாக்க முடியாது என்று கலந்துரையாடலில் தனது ஆதங்கங்களைத் தெரிவித்தார் பேராசிரியர் புஸ்பரட்ணம்.பழைய பூங்காவு அழிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் யாழ். மாவட்டத்தில் உள்ள ஏனைய புராதன சின்னங்களைப் பாதுகாப்பதற்குக் கொடுக்கப்படவில்லை என்றும் அவர் குறைப்பட்டார்.குறிப்பாக 200 வருடங்களுக்கு மேற்பட்ட சிவன் கோயில் சாவகச்சேரியில் மீட்கப்பட்டபோது இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்றார் பேராசிரியர். எனவே மக்களிடம் இது தொடர்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவேண்டும். பழமையப் பேணிக்காப்பதற்கு அவர்கள் ஆதரவளிப்பார்கள் என்றே நினைக்கிறேன். அதன் மூலமாக நாம் பண்பாட்டை நிலைநிறுத்த முடியும் என்றார் பேராசிரியர் ப.புஸ்பரட்ணம்.
Powered By: TNPF
-
▼
2011
(116)
-
▼
October
(21)
- வெளிநாடுகளில் உள்ளோரும் வாக்காளர்களாகப்பதியலாம் !
- இலங்கைத் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழும் காலம் வெக...
- ஆணி வேரறுத்து ஊர் உறவு பறித்து என் தாய்த் தேசத்தை ...
- கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு தாம் தமிழ்த் தேசியத...
- ஓங்கி ஒலிக்கும் ஊருக்கு உபதேசம் !!!
- மனோகணேசனின் கரங்களை ஏன் தமிழ் மக்கள் பலப்படுத்த வே...
- கானகாம்பிகை குளம் சாந்தபுரம் பகுதி காணிகளை உள்ளடக்...
- தமிழ் அரசியல்வாதிகளுக்கு அக்கறை இல்லை- குற்றம் சாட...
- யாழ். மாவட்டத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் ...
- சிறிலங்கா மீது போர்க்குற்ற விசாரணை நடத்த ஆதரவு தரு...
- யாழ்.பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பெண் பொ...
- மன்னார் கடற்படுகையில் எரிவாயு வளம் கண்டுபிடிக்கப்ப...
- யாழ்.ஆடியபாதம் வீதியில் பாவனையில்லாத வளவொன்றினுள் ...
- சர்வதேச தமிழ் செய்தியாளர் ஒன்றியத்தின் தலைவரும், ம...
- ஊடகங்கள் ஊடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்...
- தமிழ் மக்கள் மீண்டும் ஆயுதவழிகளில் போரிட முடியாது ...
- புனர்வாழ்வுப் பயிற்சிகளின் பின்னர் இலங்கை ஜனாதிபதி...
- தமிழீழ தேசத்தின் உரிமைக் குரல் !
- விழுங்கப்பட்ட மண்ணும் பறிக்கப்படும் மண்ணும் !
- போர்க்குற்ற ஆதாரம் ஐ.நாவிடம் இருந்தது !
- இறுதி யுத்தத்தில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள் த...
-
▼
October
(21)
-
இலங்கைத் தீவில் தமது நலன்களை நிலை நிறுத்துவதற்கான கருவியாக தமிழ் அரசியலை சர்வதேச சமூகம் எவ்வாறாகப் பயன்படுத்தும் என்பதனைக் கடந்த கட்டுரையில்...
-
•சிங்கள தேசமும் தமிழ்த் தேசமும் பேசி ஓர் கூட்டு இறைமை என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. இன்றைய நிலையில் இதனை விடுத்து அதிகாரங்களை கேட்டுப் ...
-
கனடாவின் ரொறன்ரோவில் ஒன்ராறியோ பாராளுமன்றத்துக்கு முன்னால் 29.10.2011 பொங்குதமிழ் நிகழ்வு சிறப்புற நடைபெற்றுள்ளது.பொங்கு தமிழ் நிகழ்வில் ப...
-
எழுக தமிழா நீதி கேட்டு! ஐ.நா நோக்கி பொங்கு தமிழராய்..." என்ற முழக்கத்தை ஏற்று உலகமெங்கும் இருந்து தமிழர்கள் உணர்வெழுச்சியுடன் ஜெனீவாவில...
-
சிங்கள பௌத்த மயமாக்கத்தின் நீட்சியானது அதிகாரப்பகிர்வு வழியிலான தீர்வை அன்று மட்டுமல்ல இன்றும் தடைப்படுத்தியே நிற்கின்றது. சென்ற கட்டுரையி...
-
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி அடியோடு நிராகரிப்பு. சா்வதேச பக்கச் சார்பற்ற விச...
-
ஸ்ராஸ்பூர்க் (Strasbourg)மாநாடு 27,28 செப்டெம்பர் 2011 ஐரோப்பாவின் தலைநகர்ப் பகுதியாக வர்ணிக்ப்படும் ஸ்ராஸ்பூர்க் நகரப் பகுதியில் செப்டெம...
-
வெளியார் தலையீடின்றித் தனது இறைமையையும் அரசியல் அந்தஸ்தையும் தெரிவு செய்யும் உரிமையைச் சர்வதேசச் சட்டம் தேசிய இனங்களுக்கு வழங்குகிறது. இந...
-
யாழ் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத் தலைவர்மீது இனந் தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்...
-
கனடா “வாழ வைப்போம்” அமைப்பின் தாயகம் நோக்கிய மனித நேயப் பணி, மைல்கல்லைக் கடந்து பயணிக்கின்றது.தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட மாணவர்...
பார்வை
Our site is worth$4,273.92Your website value?