கிளிநொச்சியின் கனகாம்பிகைகுளபகுதி மற்றும் சாந்தபுரம் பகுதிகளில் உள்ள பெருமளவான காணிகள் படையினரால் கையகப்படுத்தப்பட்டு படையினரின் ஆயுதக்களஞ்சியமாக மாற்றும் செயற்பாடுகள் இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பிட்ட பகுதியில் தோட்டங்காளகவும் மற்றும் வெறும் காணிகளாக காணப்பட்ட இடங்களை சுற்றி முட்கம்பிவேலிகள் போடப்பட்டு படையினரின் பாவனைக்கு உட்படுத்துவம் வகையில் பாதுகாப்பு கம்பிவேலி அமைக்கப்பட்டுவருகின்றதுதமிழ்மக்களின் காணிகளை கையகப்படுத்தும் சிறீலங்காப்படையினர் காணியின் உரியவர்கள் இல்லாத இடத்து அவை படையினரின் இருப்பிடங்களா மாறிவருகின்றது குறிப்பிட்ட பகுதியில் போரின் போது படையினர் பாவித்த கனராக ஊர்கிகள் மற்றும் ஆயுத தளபாடங்களை வைத்திருக்கும் பகுதியாக மாற்றப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Powered By: TNPF

பார்வை